Page Loader
சாம்பியன்ஸ் டிராபி வென்ற கையோடு ஓய்வு குறித்த அனைத்து வதந்திகளையும் நிராகரித்தார் ரோஹித் ஷர்மா 
ஓய்வு குறித்த அனைத்து வதந்திகளையும் நிராகரித்தார் ரோஹித் ஷர்மா

சாம்பியன்ஸ் டிராபி வென்ற கையோடு ஓய்வு குறித்த அனைத்து வதந்திகளையும் நிராகரித்தார் ரோஹித் ஷர்மா 

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2025
09:13 am

செய்தி முன்னோட்டம்

துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது ஓய்வு குறித்த எந்த ஊகங்களையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உறுதியாக மறுத்துள்ளார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, தனது எதிர்காலத் திட்டங்கள் மாறாமல் இருப்பதாகவும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவது குறித்த வதந்திகளை நிராகரிப்பதாகவும் கூறினார். "எந்த வதந்திகளும் இனிமேல் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, நான் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை" என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பாராட்டு

ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாராட்டு

சாம்பியன்ஸ் டிராபியில் ஷ்ரேயாஸ் ஐயரின் நிலையான செயல்பாட்டிற்காக ரோஹித் ஷர்மா அவரை பாராட்டினார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் அவரது முக்கிய பங்கை எடுத்துக்காட்டினார். ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்து போட்டிகளில் 243 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்தியாவின் முன்னணி ரன் ஸ்கோரராகவும், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவின் பின்னால் ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தையும் பிடித்தார். ஷ்ரேயாஸ் ஐயரின் முக்கியமான பங்களிப்பு, குறிப்பாக இறுதிப் போட்டியில், இடையில் ஏற்பட்ட பின்னடைவை அவர் சரிசெய்து அணியை மீட்டதை குறிப்பிட்டார். இதற்கிடையே, போட்டி முழுவதும் ரசிகர்களின் மகத்தான ஆதரவை அங்கீகரித்து, ரோஹித் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.