ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணியிலிருந்து ரஜத் படிதார் நீக்கம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் நட்சத்திர பேட்டர் ரஜத் படிதார் முழு சீசனில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் சீசனின் இரண்டாம் பாதியில் பங்கேற்பார் என கூறப்பட்டது. மேலும் அவர் ஒரு கட்டத்தில் கிடைக்கும் என்று நிர்வாகம் நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் தற்போது அவர் தொடரிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டு உள்ளார். எனினும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணியில் சேர்க்க விரும்பவில்லை என முடிவு செய்துள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரஜத் படிதார் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.