NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களை அனுமதிக்கக் கூடாது! ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களை அனுமதிக்கக் கூடாது! ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு!
    பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க எதிர்ப்பு

    பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களை அனுமதிக்கக் கூடாது! ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 04, 2023
    12:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைன், ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்குப் பிறகு முதல் உச்சிமாநாட்டை நடத்தியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்களை விளையாட்டு உலகில் மீண்டும் பங்கேற்க அனுமதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    முன்னதாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) ரஷ்ய மற்றும் பெலாரஷிய விளையாட்டு வீரர்கள் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் நடுநிலைக் கொடியின் கீழ் போட்டியிட அனுமதிக்க விரும்புவதாக அறிவித்தது.

    பாஸ்போர்ட் காரணமாக எந்த விளையாட்டு வீரரும் போட்டியிடுவதைத் தடுக்கக்கூடாது என்று ஐஓசி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    ஆனால் போலந்து, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையில் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளன.

    பாரிஸ் ஒலிம்பிக்

    ரஷ்ய வீரர்கள் பங்கேற்பை எதிர்க்க காரணம் என்ன?

    போலந்து, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்கள் கூட்டறிக்கையில், "நடுநிலை கொடியின் கீழ் விளையாட வைக்கும் முயற்சிகள், உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து திசைதிருப்பும் வகையில் இருப்பதோடு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் வகையில் உள்ளது." என குற்றம் சாட்டியுள்ளன.

    இதே போல் உக்ரைனும், ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களை எந்த வகையில் அனுமதித்தாலும், தாங்கள் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே போலந்து விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் கமில் போர்ட்னிசுக் தனியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும் ஐஓசி கூட்டத்திற்கு முன், 40 நாடுகள் வரை ரஷ்ய வீரர்கள் பங்கேற்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ரஷ்யா

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? அமெரிக்கா
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்திகள்
    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025