
ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக பாராலிம்பியன் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை
செய்தி முன்னோட்டம்
உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பிரமோத் பகத் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் 1 ஆம் தேதி, விளையாட்டு நடுவர் மன்றத்தின் (CAS) ஊக்கமருந்து எதிர்ப்புப் பிரிவு, இவரை BWF ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறைகளை மீறியதாகக் கண்டறிந்தது.
தற்போது 12 மாதங்களுக்குள் மற்றொரு முறை இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
SL3 தடகள வீரரான பகத், CAS மேல்முறையீட்டுப் பிரிவில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனால் அவரது மேல்முறையீடு ஜூலை 29, 2024 அன்று நிராகரிக்கப்பட்டது.
CAS மேல்முறையீட்டுப் பிரிவு, மார்ச் 1ஆம் தேதி தடை முடிவை உறுதிசெய்தது.
பாராலிம்பிக்ஸ், ஆகஸ்ட் 28- செப்டம்பர் 8 வரை 11 நாட்கள் நடைபெறும்.
ட்விட்டர் அஞ்சல்
பாராலிம்பியன் பிரமோத் பகத்துக்கு தடை
#BREAKING | இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் சஸ்பெண்ட்!#SunNews | #PramodBhagat | #Paris2024 pic.twitter.com/xe3h1PqDRE
— Sun News (@sunnewstamil) August 13, 2024
சாதனை
பிரமோத் பகத்தின் வரலாற்று சாதனை
டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸில் ஆண்கள் ஒற்றையர் SL3 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பிரமோத்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியர் ஒருவர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை.
1988 இல் பிறந்த பகத், ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது இடது காலில் ஊனம் ஏற்பட்டது.
இருந்தபோதிலும், அவர் தனது 13 வயதில் பாட்மிண்டன் விளையாட்டின் மீது ஈர்க்கப்பட்டார் மற்றும் ஒரு தொழில்முறை வீரராக மாறினார்.
டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கத்தை நோக்கிய பகத்தின் பயணம் அவரது உறுதியாலும், மூலோபாய சிந்தனையாலும் சாத்தியமானது.
அவர் இறுதிப் போட்டியில் 21-14, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டாம் நிலை வீரரான பிரிட்டனின் டேனியல் பெத்தேலை தோற்கடித்தார்.