NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இதே நாளில் அன்று : 2009இல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்
    இதே நாளில் அன்று : 2009இல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்
    விளையாட்டு

    இதே நாளில் அன்று : 2009இல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    March 03, 2023 | 04:43 pm 0 நிமிட வாசிப்பு
    இதே நாளில் அன்று : 2009இல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்
    இதே நாளில் அன்று : 2009இல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்

    கிரிக்கெட் உலகின் இருந்த நாட்களில் ஒன்றாக கருதப்படும் சம்பவம் 2009 ஆம் ஆண்டில் இதே நாளில் (மார்ச் 3) தான் அரங்கேறியது. பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் அணி முதலில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தது. ஆனால் 2008 நவம்பர் 26இல் மும்பை தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பிசிசிஐ சுற்றுப்பயணத்தை ரத்து செய்த பின்னர் இலங்கை பாகிஸ்தானுக்கு சென்றது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச அணிகளுக்கு பாதுகாப்பு எப்போதுமே கேள்விக்குறியாகவே இருந்த போதிலும், இலங்கை கிரிக்கெட் அணியின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலால் 2011 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடமிருந்து ஐசிசி பறித்தது.

    2009 தாக்குதல் : நடந்தது என்ன?

    பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி லாகூரில் உள்ள கடாபி மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய 12 பேர் பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆறு பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உலகமே இதைக்கேட்டு அச்சத்தில் ஆழ்ந்த நிலையில, பாகிஸ்தான் விமானப்படை உடனடியாக அனைத்து வீரர்களையும் இலங்கைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தது. இதையடுத்து பல வருடங்கள் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் செல்லாத நிலையில், 2015க்கு பிறகு தான் நிலைமை சற்று மாறத்தொடங்கியது. மேலும் 2019 இல் தான் இலங்கை பாகிஸ்தானுக்கு மீண்டும் சென்று விளையாடியது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கிரிக்கெட்

    கிரிக்கெட்

    பிரதமர் மோடியை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் : என்ன பேசினார் தெரியுமா? விளையாட்டு
    INDvsAUS மூன்றாவது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்
    "கோலி களத்தில் தான் அப்படி.. ஆனால் உண்மையில்.." : மனம் நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக் விளையாட்டு
    IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : 76 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023