NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் இடம் பெற்ற சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் இடம் பெற்ற சம்பவம்
    இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் இடம் பெற்ற சம்பவம் நடந்த தினம் இன்று

    இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் இடம் பெற்ற சம்பவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 13, 2023
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    மார்ச் 13, 1996 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகும். ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதால் ரசிகர்கள் பாட்டில் மற்றும் கேன்களை வீசி எறிந்து வன்முறைக்காடாக மாறியது.

    1996 உலகக்கோப்பை காலிறுதியில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த இந்திய அணி இலங்கையுடன் மோதியது.

    ஈடன் கார்டனில் இதே நாளில் நடந்த அந்தப் போட்டியில் கேப்டன் முகமது அசாருதின் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்து.

    இலங்கையின் டாப் டார்டாரை ஜவஹல் ஸ்ரீநாத் எளிதாக சரித்தாலும், மிடில் ஆர்டரில் குறிப்பாக அரவிந்த டி சில்வா மற்றும் ரோஷன் மஹாநாமவின் அரைசதங்கள் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி

    இலங்கையின் பந்துவீச்சில் சுருண்டது இந்தியா

    இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் சச்சின் மட்டும் 65 ரன்கள் எடுத்த நிலையில், மறுபுறம் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்

    34.1 ஓவரிலேயே 8 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. வினோத் காம்ப்ளி (10*), கும்ப்ளே (0*) ஆகியோர் கிரீஸில் இருந்தனர்.

    இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள் பாட்டில்கள், கேன்கள், பிளாஸ்டிக் பைகளை மைதானத்தை நோக்கி வீசினர். இதனால் இலங்கை வீரர்கள் விளையாட மறுத்தனர்.

    மேலும் ஸ்டேடியத்தின் சில ஸ்டாண்ட்களில் பொருட்கள் எரிக்கப்பட்டன. போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட மீண்டும் தொடங்கிய நிலையிலும் ரசிகர்கள் வன்முறை தொடர்ந்ததால் போட்டி நடுவர் கிளைவ் லியோல்ட் இலங்கை வென்றதாக அறிவித்தார்.

    இந்த நிகழ்வு இந்திய கிரிக்கெட்டின் கருப்பு பக்கங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கிரிக்கெட்

    தென்னாப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் டி20 கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : நாட் ஸ்கிவர்-ஹேலி மேத்யூஸ் ஜோடி அபாரம்! மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி மகளிர் ஐபிஎல்
    தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தான் : முன்னாள் கிரிக்கெட்டர் ஏபி டி வில்லியர்ஸ் டி20 கிரிக்கெட்
    ஐபிஎல் விளம்பர ஷூட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா : வைரலாகும் வீடியோ ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025