NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானிலிருந்து இடமாற்றம் செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தயார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானிலிருந்து இடமாற்றம் செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தயார்
    ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானிலிருந்து இடமாற்றம் செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தயார்

    ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானிலிருந்து இடமாற்றம் செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தயார்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 06, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்ற நிலைப்பாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

    பஹ்ரைனில் சனிக்கிழமை (பிப்ரவரி 4) நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

    கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு செல்வதற்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியாது என்று பிசிசிஐ, இதற்கான காரணமாக தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆசிய கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ளது.

    இருப்பினும், ஆசிய கோப்பையை நடத்துபவர்கள் குறித்து முடிவு எடுக்க ஏசிசி நிர்வாக குழு முடிவு செய்தது. அடுத்த மாதம் குழு மீண்டும் கூடும் போது ஏசிசி இடமாற்றம் பற்றி விவாதிக்கும்.

    ஆசிய கோப்பை

    ஆசிய கோப்பை நடத்த வாய்ப்புள்ள இடங்கள்

    ஏசிசியின் தலைவராகவும் உள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாது என்று முன்னதாக கூறியிருந்தார்.

    பிசிபி நடத்தும் நாடாக இருந்து கொண்டு, மற்றொரு நாட்டில் வைத்து விளையாடுவதில் பிசிசிஐக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறப்படுகிறது.

    பிசிபி இந்த ஏற்பாட்டின்படி போட்டியை நடத்த ஒப்புக்கொண்டால், அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் வைத்தது போட்டியை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இது குறித்து ஜெய் ஷா பிசிபியின் புதிய தலைவரான நஜாம் சேத்தியிடம் பேசியதாக தெரிகிறது.

    முன்னதாக, பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்

    கிரிக்கெட்

    மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா! ஒருநாள் கிரிக்கெட்
    மனைவிக்கு மாதம் ரூ.1.3 லட்சம் ஜீவனாம்சம்! கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு! இந்திய அணி
    திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்! இந்திய அணி
    ரஞ்சி கோப்பை 2022-23 : மும்பைக்கு எதிராக சதமடித்தார் கேதர் ஜாதவ்! ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025