NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : கேமரூன் கிரீனைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் வெளியேறினார்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : கேமரூன் கிரீனைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் வெளியேறினார்!
    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்

    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : கேமரூன் கிரீனைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் வெளியேறினார்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 31, 2023
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இருந்து விலகுவதாக உறுதி செய்துள்ளார்.

    கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் பாதிக்கப்பட்டார்.

    பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்காமல், மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், தான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டேன் என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது வழங்கும் விழாவின்போது தெரிவித்துள்ளார்.

    மிட்செல் ஸ்டார்க்

    பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முக்கியத்துவம்

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முனைப்பாக உள்ள நிலையில், இரு அணிகளுமே இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

    ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தாலே, இறுதிப்போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துவிடும்.

    ஆனால், அந்த அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் அவதிப்படுவதால், இந்திய அணியை எதிர்கொள்வதில் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

    அதே சமயம் இந்திய அணியும் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமானால், இந்த தொடரை முழுமையாகவோ அல்லது 3-0, 3-1 என்ற அளவிலோ கைப்பற்றியதாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஐசிசி சிறந்த ஆடவர் டெஸ்ட் அணி 2022 : இந்தியர் வீரர்களில் ரிஷப் பந்த் மட்டும் இடம் பெற்றார்! ஐசிசி விருதுகள்
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் : முதல் போட்டியிலேயே கேமரூன் கிரீன் ஆடுவார்! ஆஸி. பயிற்சியாளர் நம்பிக்கை! விளையாட்டு

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! தமிழ்நாடு
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!! விளையாட்டு
    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025