NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!
    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி

    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 25, 2023
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளை தவிர்த்து வருவது குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளது.

    முன்னதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் மல்யுத்த வீரர்களிடையே ஜனவரி முதல் வெளிப்படையாக மோதல் நடந்து வருகிறது.

    இந்நிலையில், வினேஷ் போகாட், பஜ்ராங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா, அன்ஷு மாலிக் மற்றும் சங்கிதா மோர் உள்ளிட்ட சிறந்த மல்யுத்த வீரர்கள் எகிப்து மற்றும் குரோஷியாவில் நடக்கும் சர்வடதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டனர்.

    டாப்ஸ் திட்டத்தின் கீழ் மல்யுத்த வீரர்களுக்கு அவர்களின் தயாரிப்பு மற்றும் பயிற்சியை ஆதரிக்க கோடிக்கணக்கில் நிதி உதவியை வழங்கி வரும் மத்திய அரசுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய மல்யுத்த வீரர்கள்

    வீரர்கள் பங்கேற்க மறுப்பதன் பின்னணி

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் பல பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் எனக் கூறி ஜனவரியில் வீரர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இதில் நேரடியாக தலையிட்டு, குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தது.

    புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் தலைமையிலான ஆறு பேர் கொண்டு குழு விசாரித்து வரும் நிலையில், குழு தனது அறிக்கையை பிப்ரவரி 23 அன்று சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டது.

    ஆனால் குழு கூடுதல் அவகாசம் கேட்டதால் இரண்டு வார நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என வீரர்கள் முடிவெடுத்துள்ளதாகக் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோடி
    மனிதர்கள் தொலைபேசியால் கட்டப்பட்டிருக்கிறார்கள்! வைரலாகும் ட்விட்டர் பதிவு! ட்விட்டர் புதுப்பிப்பு
    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025