NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!
    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!
    விளையாட்டு

    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!

    எழுதியவர் Sekar Chinnappan
    February 25, 2023 | 11:13 am 0 நிமிட வாசிப்பு
    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!
    சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி

    இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளை தவிர்த்து வருவது குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளது. முன்னதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் மல்யுத்த வீரர்களிடையே ஜனவரி முதல் வெளிப்படையாக மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், வினேஷ் போகாட், பஜ்ராங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா, அன்ஷு மாலிக் மற்றும் சங்கிதா மோர் உள்ளிட்ட சிறந்த மல்யுத்த வீரர்கள் எகிப்து மற்றும் குரோஷியாவில் நடக்கும் சர்வடதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டனர். டாப்ஸ் திட்டத்தின் கீழ் மல்யுத்த வீரர்களுக்கு அவர்களின் தயாரிப்பு மற்றும் பயிற்சியை ஆதரிக்க கோடிக்கணக்கில் நிதி உதவியை வழங்கி வரும் மத்திய அரசுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    வீரர்கள் பங்கேற்க மறுப்பதன் பின்னணி

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் பல பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் எனக் கூறி ஜனவரியில் வீரர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இதில் நேரடியாக தலையிட்டு, குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தது. புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் தலைமையிலான ஆறு பேர் கொண்டு குழு விசாரித்து வரும் நிலையில், குழு தனது அறிக்கையை பிப்ரவரி 23 அன்று சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் குழு கூடுதல் அவகாசம் கேட்டதால் இரண்டு வார நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என வீரர்கள் முடிவெடுத்துள்ளதாகக் தெரிகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா

    இந்தியா

    பிப்ரவரி 25க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்
    ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை கேரளா
    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது ஏர் இந்தியா
    தொடர் தோல்வியால் விரக்தி : பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து! விளையாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023