NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்
    WFI தலைவர் பிரிஜ் பூஷன் விசாரணை முடியும் வரை ஒதுங்கிக்கொள்வார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது

    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023
    03:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

    பாலியல் புகார்கள் சுமத்தி அவரை பதவி விலகக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகள் ஒரு போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் 3 நாட்களாக நடத்தினர்.

    டெல்லியின் ஜந்தர் மந்தர் நூற்றுக்கணக்கான முக்கிய போராட்டங்களைக் கண்டுள்ளது.

    கடந்த புதன்கிழமை, ஜந்தர்மந்தர் இதுவரை கண்டிராத ஒரு போராட்டத்தை கண்டது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்தினர்.

    WFI

    போராட்டம் வாபஸ்

    நேற்று(ஜன:20) இரவு, பாதிக்கப்பட்டவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து உறுதியளித்ததை அடுத்து, வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த விசாரணை முடியும் வரை பிரிஜ் பூஷன் விலகி இருப்பார் என்றும் அமைச்சர் தாக்குர் உறுதியளித்திருக்கிறார்.

    இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

    மல்யுத்த வீரர் வினேஷ் மற்றும் பஜ்ரங் புனியா, மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த பிரச்சினைகளை முன்வைத்த்ததாக கூறியுள்ளனர்.

    ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர் உள்ளிட்ட 30 புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    போராட்டம்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார் இந்தியா
    ஜனவரி 18க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தமிழ்நாடு

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025