NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்
    இந்தியா

    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்

    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023, 03:16 pm 1 நிமிட வாசிப்பு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்
    WFI தலைவர் பிரிஜ் பூஷன் விசாரணை முடியும் வரை ஒதுங்கிக்கொள்வார் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. பாலியல் புகார்கள் சுமத்தி அவரை பதவி விலகக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகள் ஒரு போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் 3 நாட்களாக நடத்தினர். டெல்லியின் ஜந்தர் மந்தர் நூற்றுக்கணக்கான முக்கிய போராட்டங்களைக் கண்டுள்ளது. கடந்த புதன்கிழமை, ஜந்தர்மந்தர் இதுவரை கண்டிராத ஒரு போராட்டத்தை கண்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்தினர்.

    போராட்டம் வாபஸ்

    நேற்று(ஜன:20) இரவு, பாதிக்கப்பட்டவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து உறுதியளித்ததை அடுத்து, வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த விசாரணை முடியும் வரை பிரிஜ் பூஷன் விலகி இருப்பார் என்றும் அமைச்சர் தாக்குர் உறுதியளித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். மல்யுத்த வீரர் வினேஷ் மற்றும் பஜ்ரங் புனியா, மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த பிரச்சினைகளை முன்வைத்த்ததாக கூறியுள்ளனர். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர் உள்ளிட்ட 30 புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    போராட்டம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    போராட்டம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023