NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள்
    டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸில் ஏற்பாடுகள் படுமோசம் எனக் கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள்

    டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 27, 2023
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுடெல்லியில் சனிக்கிழமை (மார்ச் 25) தொடங்கிய சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பில் தொடங்கிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இருந்து கஜகஸ்தானின் ஜன்சயா அப்துல்மாலிக் மற்றும் ஜெர்மனின் எலிசபத் ஆகியோர் விலகியுள்ளனர்.

    தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட வசதிகள் படுமோசமாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கஜகஸ்தானின் ஜன்சயா அப்துல்மாலிக் போட்டியில் பங்கேற்க டெல்லி வந்தபோது விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்றும், தங்களை தங்கவைக்கும் ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு அறை இல்லை என்று அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாவும், கடந்த ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில், டெல்லியில் இப்படியொரு மோசமான நடத்தையை எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.

    மகளிர் கிராண்ட் பிரிக்ஸ்

    மன்னிப்பு கோரிய சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு

    நடந்த தவறுகளுக்காக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு வீராங்கனைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

    எனினும் போட்டியை ஒத்திவைக்க முடியாது என்றும் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என அறிவித்துள்ளது.

    மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் என்பது நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதல் இரண்டு கட்டங்கள் கஜகஸ்தான் மற்றும் ஜெர்மனியில் நடந்து முடிந்துள்ளன.

    மூன்றாவது கட்டம் தற்போது டெல்லியில் நடைபெறும் நிலையில் இதில் 12 வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

    அதில் தற்போது இரண்டு வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், 10 வீராங்கனைகளுடன் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், இதில் 3 இந்திய வீராங்கனைகள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    உலகம்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! இங்கிலாந்து
    LGBTQ மக்கள் இரத்த தான செய்யலாமா? - விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம் ஆரோக்கியம்
    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025