NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?
    'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?

    'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 18, 2024
    07:19 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் முன்னாள் வர்த்தக கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்கில் அவர்கள் நிரந்தர தடை மற்றும் நஷ்டஈடு கோருகின்றனர்.

    இந்த மனு, நீதிபதி பிரதீபா எம் சிங் முன், நேற்று, ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

    முன்னதாக, தோனி, தனது பிசினஸ் பார்ட்னர்கள் தன்னிடம் ரூ.15-16 கோடி ஏமாற்றியதாக அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுத்திருந்தார்.

    ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் இரண்டு அதிகாரிகள் மீது, தோனி, ராஞ்சியில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

    2017இல் போடப்பட்ட கிரிக்கெட் அகாடமியின் ஒப்பந்தத்தின் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அந்த நிறுவனத்தினை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    card 2

    தோனியின் புகார் கூறுவது என்ன?

    உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக 2017 ஆம் ஆண்டில் தோனியுடன் திவாகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அறிக்கைகளின்படி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்தத்தின்படி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறது.

    ஆனால், அவை மதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    பலமுறை தோனி சார்பாக நினைவூட்டப்பட்ட போதிலும், ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆகஸ்ட் 15, 2021 அன்று ஆர்கா ஸ்போர்ட்ஸுக்கு வழங்கப்பட்ட அதிகாரக் கடிதத்தை தோனி திரும்பப் பெற கூறியுள்ளார்.

    சட்டரீதியாக தோனி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.

    card 3

    திவாகரும், அவரது மனைவி சௌமியாவும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர்

    திவாகரும், அவரது மனைவி சௌமியா தாஸும், தற்போது தோனிக்கு எதிராக நிரந்தர தடை மற்றும் நஷ்டஈடு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பிடிஐபடி , திவாகரும், சௌமியாவும், தோனி மற்றும் அவர் சார்பாக செயல்படுபவர்கள் அவதூறான எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் கூறக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தீங்கிழைக்கும், அவதூறான அல்லது பொய்யான அறிக்கைகளை உருவாக்குவதிலிருந்தும், பரப்புவதிலிருந்தும் அல்லது வெளியிடுவதிலிருந்தும் அவர்களைத் தடுக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர்.

    கூடுதலாக தங்கள் மீது அவதூறு பரப்பியதற்காக நஷ்ட ஈடும் கேட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    வழக்கு
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    எம்எஸ் தோனி

    எம்எஸ் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது! விரைவில் வீடு திரும்புவார் என தகவல்! ஐபிஎல்
    யார் இந்த ஷீலா சிங்? ரூ.800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சிஇஓவாக கலக்கும் எம்எஸ் தோனியின் மாமியார் சென்னை சூப்பர் கிங்ஸ்
    "இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டது இப்படித்தான்" : முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் பூபிந்தர் சிங் இந்திய கிரிக்கெட் அணி
    தோனி கேண்டி கிரஷ் விளையாடுவாரா! வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் வைரல் செய்தி

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம் மன்சூர் அலிகான்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை

    கிரிக்கெட்

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு  ஜெகன் மோகன் ரெட்டி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டெஸ்ட் கிரிக்கெட்
    2023ம் ஆண்டில் மட்டும் 2006 ரன்கள்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி! விராட் கோலி
    முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ பிசிசிஐ

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் புள்ளிவிபரம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு ஆப்கான் கிரிக்கெட் அணி
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியாவின் தொடர் தோல்விக்கு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணி
    ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள்; ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025