NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் வந்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் வந்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்
    ரிஷப் பண்டை வாங்குவது குறித்து சிஎஸ்கே சிஇஓ விளக்கம்

    ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் வந்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 10, 2024
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்டை வாங்கும் முடிவில் உள்ளதாக வெளியாகி வரும் வதந்திகளைப் பற்றி பேசினார்.

    சிஎஸ்கே அவரை வாங்க ஆர்வம் காட்டினாலும், தங்களது பர்ஸில் உள்ள தொகையை வைத்து அதிக போட்டி நிறைந்த ஏலத்தில் பண்டை வாங்குவது சவாலானது என்று விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டி, பண்டின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் அவரது சமூக ஊடக இடுகைக்குப் பிறகு எழுந்தன.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் தக்கவைப்பு பட்டியலில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்ட பிறகு இந்த வதந்திகள் வலுப்பெற்றன.

    சிறந்த வீரர்கள்

    சிறந்த வீரர்களை தக்கவைக்க முன்னுரிமை

    சிஎஸ்கே புதிய திறமைகளுக்கு திறந்திருந்தாலும், முதன்மை கவனம் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் உள்ளது என்று விஸ்வநாதன் வலியுறுத்தினார்.

    ப்ரோவோக் டிவியில் முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடுவுடன் நடந்த உரையாடலில், ஐபிஎல் 2024க்கான சிஎஸ்கேயின் தக்கவைப்பு உத்தியை விஸ்வநாதன் கோடிட்டுக் காட்டினார்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்எஸ் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோருடன் கலந்துரையாடிதாகவும், அதன் பின்னரே கெய்க்வாட், தோனி, ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீஷா பத்திரனா போன்ற அணியின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய வீரர்களை தக்கவைக்கும் முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

    மேலும், அணியில் ரிஷப் பண்ட் உள்ளிட்ட யார் சேர்க்கப்பட்டாலும், எம்எஸ் தோனியின் வளர்ப்பான ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக செயல்படுவார் என்பதையும் விஸ்வநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கே
    ரிஷப் பண்ட்
    ஐபிஎல்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2024 : KKR -ஐ வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே ஐபிஎல்
    CSK ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா-தோனி; வைரலாகும் வீடியோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    MI vs CSK: விளாசி தள்ளிய தல; விக்கெட்டுகளை அள்ளிய பத்திரனா மும்பை இந்தியன்ஸ்
    CSK அணியின் வெற்றிக்கு வித்திட்ட MS தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்; வைரலாகும் காணொளி மும்பை இந்தியன்ஸ்

    சிஎஸ்கே

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ்

    ரிஷப் பண்ட்

    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் இந்தியா vs பாகிஸ்தான்
    அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
    துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார் துலீப் டிராபி
    பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு ஸ்டார்ட்அப்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024: தொடர் நாயகன் முதல் ஆட்டநாயகன் வரை விருது வென்ற வீரர்கள்! ஐபிஎல் 2024
    RCB அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமனம் தினேஷ் கார்த்திக்
    ஐபிஎல் 2025: விதிகள் குறித்து KKR ஷாருக்கான், PK நெஸ் வாடியா இடையே கடும் வாக்குவாதம் பிசிசிஐ
    ஐபிஎல்லில் மறுபிரவேசம்; ஆசையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைக்குமா? ஸ்டீவ் ஸ்மித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025