எம்எஸ் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? பரிசீலையில் இருக்கும் மூன்று பெயர்கள்
செய்தி முன்னோட்டம்
43 வயதில், ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாட உள்ள நிலையில், இது அவரது கடைசி சீசனாக இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளது.
ரசிகர்கள், கடைசியாக ஒரு முறை எனும் அர்த்தம் கொண்ட வாசகம் இடம்பெறும் டி-சர்ட்டை தோனி அணிந்திருப்பதைக் கண்ட பிறகு ஓய்வு பற்றிய சலசலப்பு தீவிரமடைந்தது.
முன்னதாக, சேப்பாக்கத்தில் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புவதாக தோனி முன்பு கூறியிருந்தார்.
இதன்படி, வரும் மே 12 அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்கும் போட்டி, அவரது பிரியாவிடை போட்டியாக இருக்கலாம்.
இந்த சீசனில் சென்னையின் சொந்த மைதானத்தில் பிளேஆஃப்கள் எதுவும் திட்டமிடப்படாததால், இந்த போட்டியுடன் அவர் விடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த விக்கெட் கீப்பர்
தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்கும் வீரர்
தோனி பாதியில் ஓய்வு பெற்றால், விக்கெட் கீப்பிங்கில் அவருக்கு மாற்றாக சிஎஸ்கே மூன்று வீரர்களை பரிசீலனை செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
இதில் முதலாவதாக உள்ளது டெவோன் கான்வே. அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான டெவோன் கான்வே மிகவும் நம்பகமான தேர்வாகும்.
அவருக்கு சர்வதேச விக்கெட் கீப்பிங் அனுபவம் உள்ளது.
மேலும் அவர் கடைசியாக விளையாடிய 2023 சீசனில் சிஎஸ்கே அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். அப்போது 22 இன்னிங்ஸ்களில் 924 ரன்கள் எடுத்தார்.
இதர விருப்பங்கள்
விக்கெட் கீப்பிங்கிற்கான இதர விருப்பங்கள்
இந்த பட்டியலில் அடுத்து உள்ளது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். இவர் வழக்கமான விக்கெட் கீப்பராக இல்லையென்றாலும், சையத் முஷ்டாக் அலி டிராபி போன்ற உள்நாட்டு போட்டிகளில் விக்கெட் கீப்பராக பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.
விக்கெட் கீப்பராக அவரை சேர்ப்பது அணியின் வெளிநாட்டு வீரர் தேர்வில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும்.
இறுதியாக இளம் வீரர் வான்ஷ் பேடி. டெல்லி பிரீமியர் லீக்கில் இளம் விக்கெட் கீப்பர் வான்ஷ் பேடி தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் ஈர்க்கப்பட்டார்.
அங்கு சராசரியாக 44.20 சராசரியில் 185.71 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருந்தார்.
தோனிக்குப் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அணியின் நீண்டகால தேர்வாக அமையலாம்.