NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை?
    முதல் போட்டிக்கு மட்டும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்

    சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 30, 2023
    06:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடக்கும் அந்த அணியின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில், புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    நெதர்லாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக மார்க்ரம் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். மேலும் ஏப்ரல் 3 ஆம் தேதி அவர் இந்தியாவுக்கு வருவார்.

    இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவின் நேரடித் தகுதிக்கு இந்தத் தொடர் முக்கியமானது.

    அவர்கள் நெதர்லாந்திற்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    புவனேஷ்வர் குமார்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார்

    புவனேஷ்வர் குமார் 2013 இல் சன்ரைசர்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து அந்த அணியில் விளையாடி வருகிறார். மேலும் கடந்த காலங்களிலும் அந்த அணியை வழிநடத்தியுள்ளார்.

    2019 இல் ஆறு ஆட்டங்களிலும், 2022 இல் ஒரு முறையும் அணியை வழிநடாத்தியுள்ள நிலையில், அவர் தலைமையேற்ற அந்த ஏழு போட்டிகளில் இரண்டில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

    மார்க்ரம் தவிர, மார்கோ ஜான்சன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட மாட்டார்கள்.

    இதற்கிடையே, மார்க்ரம் சமீபத்தில் எஸ்ஏ 20 லீக் அறிமுக தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தலைமையேற்று பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்

    சமீபத்திய

    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : முதல் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கிரிக்கெட்
    7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்துவது ஏன்? எம்.எஸ்.தோனி கூறும் காரணம் இது தான்! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : காயத்தில் அவதிப்படும் வீரர்களால் சிஎஸ்கே, எல்எஸ்ஜி அணிகளுக்கு பின்னடைவு! கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆதிக்கம் தொடருமா? கிரிக்கெட்

    கிரிக்கெட்

    இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் ஹென்றி ஷிப்லி அசத்தல் ஒருநாள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்! பிசிசிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025