Page Loader
பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை
இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை

பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2024
04:19 pm

செய்தி முன்னோட்டம்

பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. எனினும் ஜோஷ் ஹேசில்வுட்டின் அபார பந்துவீச்சால் இந்திய பேட்டிங் ஆர்டர் முழுமையாக சொதப்பியதால், முதல் நாளிலேயே 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்த நிலையில், ரிஷப் பண்ட் 37 ரன்களும், கே.எல்.ராகுல் 26 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது முதல் போட்டியில் விளையாடும் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களுடன் இரண்டாவது நாளை முடித்துள்ளது. இதன் மூலம் 218 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.