NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
    மகளிர் ஐபிஎல் அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ

    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 25, 2023
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் அணிகளின் பட்டியலை பிசிசிஐ இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ளது.

    2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு மகளிர் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், தொழில்நுட்ப ஏலம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், நேற்று தொழில்நுட்ப ஏலத்திலிருந்து நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, நிதி ஏலத்தை சமர்ப்பிக்க பிசிசிஐ உத்தரவிட்டது.

    அதன்படி நிதி ஏலத்தை நிறுவனங்கள் இன்று சமர்ப்பித்ததை அடுத்து, ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மொத்தம் ஐந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணிகளின் மொத்த ஏல மதிப்பீடு ரூ.4,669.99 கோடியாக உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பிசிசிஐ ட்வீட்

    𝐁𝐂𝐂𝐈 𝐚𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐬 𝐭𝐡𝐞 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐟𝐮𝐥 𝐛𝐢𝐝𝐝𝐞𝐫𝐬 𝐟𝐨𝐫 𝐖𝐨𝐦𝐞𝐧’𝐬 𝐏𝐫𝐞𝐦𝐢𝐞𝐫 𝐋𝐞𝐚𝐠𝐮𝐞.

    The combined bid valuation is INR 4669.99 Cr

    A look at the Five franchises with ownership rights for #WPL pic.twitter.com/ryF7W1BvHH

    — BCCI (@BCCI) January 25, 2023

    மகளிர் ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் ஏலத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

    அதானி குழுமம் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட உரிமையை ரூ. 1,289 கோடிக்கு வாங்கியுள்ளது.

    மும்பையை தளமாகக் கொண்ட அணியை மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் ரூ. 912.99 கோடிக்கு வாங்கியுள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர்கள் பெங்களூருவை சேர்ந்த அணியை ரூ. 901 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர்கள் டெல்லியை சேர்ந்த அணியை ரூ. 810 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    காப்ரி குளோபல் லக்னோவை தளமாகக் கொண்ட அணியை ரூ. 757 கோடிக்கு வாங்கியுள்ளனர்.

    இதற்கிடையே, ஆடவர் ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், சென்னையை தளமாகக் கொண்டு எந்த அணியும் உருவாக்கப்படாததற்கு சமூக ஊடக தளங்களில் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    கிரிக்கெட்
    பெண்கள் கிரிக்கெட்

    சமீபத்திய

    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19

    ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலத்தில் குதித்துள்ள டாப் நிறுவனங்கள்! ஐபிஎல் 2023

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! இந்தியா
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!! விளையாட்டு
    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! ரஞ்சி கோப்பை

    பெண்கள் கிரிக்கெட்

    யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! U19 உலகக்கோப்பை
    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025