LOADING...
பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!
பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா

பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2023
05:10 pm

செய்தி முன்னோட்டம்

தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கி சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா வெள்ளிப் பதக்கம் வென்றார். 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 இறுதிப் போட்டியில் பங்கேற்ற அவானி லெகாரா 0.1 புள்ளி வித்தியாசத்தில் ஸ்வீடனின் அன்னா பென்சனிடம் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அவானி இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி வென்ற நிலையில், இது இந்திய பாரா துப்பாக்கிச் சுடுதல் அணியின் 100வது பதக்கமாக ஆனது. இதற்கிடையே 25 மீ பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் அமீர், ராகுல் & நிஹால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post