NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கங்குலியுடனான ஈகோ மோதல் தான் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க காரணம் : சேத்தன் சர்மா
    அடுத்த செய்திக் கட்டுரை
    கங்குலியுடனான ஈகோ மோதல் தான் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க காரணம் : சேத்தன் சர்மா
    ஈகோ மோதலால் தான் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம் எனக் கூறிய சேத்தன் சர்மா

    கங்குலியுடனான ஈகோ மோதல் தான் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க காரணம் : சேத்தன் சர்மா

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 15, 2023
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, பிசிசிஐ-கோலி மோதல் குறித்தும், சவுரவ் கங்குலியுடன் கோலியின் உறவு குறித்தும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு முழுமையாக கலைக்கப்பட்டது. எனினும், சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக்குழு தலைவராக பிசிசிஐ'யால் நியமிக்கப்பட்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள், பிசிசிஐ மற்றும் வீரர்கள் குறித்து ஊடகங்களுடன் பேசக்கூடாது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதியாக உள்ளது.

    இருப்பினும், சேத்தன் சர்மா, ஜீ ஊடகத்தின் ஸ்டிங் ஆபரேஷனின் போது, பல பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

    சேத்தன் சர்மா

    சவுரவ் கங்குலி - விராட் கோலி மோதல் குறித்த முழு விபரம்

    ஸ்டிங் வீடியோவில், சில வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டாலும், உடல் தகுதி இருப்பது போல் காட்டுவதற்காக ரகசிய ஊசி போட்டுக் கொள்வதாக பரபரப்புக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

    மேலும், 2021ல் இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலியிடம், கேப்டன்சி பொறுப்பை தொடருமாறு அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் கோலி அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    இதை கங்குலி ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையில், கோலி அதை மறுத்ததால், இருவருக்கும் இடையே ஈகோ மோதல் அதிகமாகியதாகவும், அதன் வெளிப்பாடாகவே அடுத்தடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்புகளில் இருந்தும் கோலி நீக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23 : மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் கர்நாடகா! ரஞ்சி கோப்பை
    பயிற்சியாளருக்கு மஜாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ! கிரிக்கெட் செய்திகள்
    அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை! டெஸ்ட் கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் : மீண்டும் சுழலில் சிக்கிய புஜாரா : முர்பியிடம் வீழ்ந்தது எப்படி? டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025