NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / படிப்பு முக்கியம் பிகிலு; உயர்கல்விக்காக 24 வயதில் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய ஒலிம்பிக் வீராங்கனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    படிப்பு முக்கியம் பிகிலு; உயர்கல்விக்காக 24 வயதில் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய ஒலிம்பிக் வீராங்கனை
    டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத்

    படிப்பு முக்கியம் பிகிலு; உயர்கல்விக்காக 24 வயதில் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய ஒலிம்பிக் வீராங்கனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 22, 2024
    02:23 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி முதன்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தது.

    இறுதியில் இந்தியா காலிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறினாலும், ஜெர்மனி அணிக்கு எதிரான காலிறுதியில் வெற்றி பெற்ற ஒரே இந்திய வீராங்கனையாக அர்ச்சனா காமத் மட்டுமே இருந்தார்.

    இதன் மூலம், இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், அர்ச்சனா காமத் விளையாட்டுத் துறை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    2028இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்திற்கு உத்தரவாதம் இல்லாததால், டேபிள் டென்னிஸை தொழில் ரீதியாக விட்டுவிட்டு வெளிநாட்டில் படிக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

    படிப்பு

    டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் முடிவின் பின்னணி

    பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிறகு, 24 வயதே ஆன அர்ச்சனா காமத், தனது பயிற்சியாளர் அன்ஷுல் கர்க்குடன் அடுத்த விளையாட்டுகளில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து உரையாடியுள்ளார்.

    அப்போது அர்ச்சனாவின் நிலைப்பாட்டைக் கண்டு திகைத்துப் போன பயிற்சியாளர், பதக்கம் வெல்வது கடினம் என நேர்மையாக பதில் அளித்துள்ளார்.

    இதையடுத்து வெளிநாட்டில் கல்வி பயிலும் முடிவை அர்ச்சனா காமத் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளின் நிதி நிலைத்தன்மை கவலைக்குரியதாக உள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    உபகரணங்கள் மற்றும் பயிற்சியின் அடிப்படையில் வீரர்களுக்கு ஆதரவு இருந்தாலும்,வீரர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான தளமாக இந்த விளையாட்டு மாறுவதில் இருந்து இன்னும் வெகு தொலைவில் இருப்பதாக தான் கருதுவதாக கர்க் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டேபிள் டென்னிஸ்
    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    ஒலிம்பிக்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டேபிள் டென்னிஸ்

    ஆசிய போட்டிகளுக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு ஆசிய விளையாட்டுப் போட்டி
    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    Asian Games 2023: தற்போது வரையிலான இந்திய அணியின் வெற்றி தோல்வி நிலவரம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    Asian Games 2023, நாள் 1: நாளின் தொடக்கத்தில் கைப்பற்றிய 5 பதக்கங்களுடனேயே இன்றைய நாளை நிறைவு செய்த இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: 3வது நாளில் கவனிக்க வேண்டிய சிறந்த இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்
    ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர் ஒலிம்பிக்
    பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: நடப்பு சாம்பியனான பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி ஒலிம்பிக்
    பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் துப்பாக்கி சூடு

    ஒலிம்பிக்

    இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகளை அனுப்புகிறது விளையாட்டு அமைச்சகம்; ஏன் தெரியுமா? பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கியது இந்திய ரயில்வே இந்திய ரயில்வே
    ஒலிம்பிக்கில் 52 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி
    ஒலிம்பிக் 2024: பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி

    இந்தியா

    பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகையின் மதிப்பு பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
    ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை கண்ட இடங்கள் சுதந்திர தினம்
    ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடும் நாகாலாந்து மக்கள்; ஏன் தெரியுமா? சுதந்திர தினம்
    சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்; விரிவான வழிகாட்டுதல் சுதந்திர தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025