OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்?
செய்தி முன்னோட்டம்
Mafia என்று அழைக்கப்படுபவர்களின் உறுப்பினர்கள் ஒரு காலத்தில் பேபால் உடன் தொடர்புடையவர்களாக அறியப்பட்டார்கள்.
இவர்கள் தொடர் தொழில்நுட்ப தொழில்முனைவோர். அவர்கள் டெஸ்லா, லிங்க்ட்இன் மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்களை நிறுவியுள்ளனர்.
இதனிடையே, இப்போது மற்றொரு மாஃபியாவின் பெயர் இணையத்தில் உலா வருகிறது. அதுதான் OpenAI Mafia. அவர்கள் யார்? என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
Mafia என்று சொல்வது ஒன்று. ஓபன்ஏஐயின் முன்னாள் ஊழியர்கள் ஏன் 'மாஃபியா' என்று அழைக்கப்படுகிறார்கள்?
ChatGPT என்பது வரலாற்றில் வேகமாக வளர்ந்துகிறது. இதேபோல், OpenAI இன் முன்னாள் ஊழியர்களின் கூட்டமைப்பு நிறுவனர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் வேகமாக வளர்ந்து வரும் குழுவாகும்.
துணிகர முதலீட்டாளர்கள் தங்கள் செல்லப்பிள்ளை திட்டங்களுக்கு பணத்தை வாரி வழங்க வரிசையில் நிற்கின்றனர்.
OpenAI Mafia
OpenAI Mafia - 30 உறுப்பினர்கள் உள்ளனர்
OpenAI Mafia $1 பில்லியன் வசூல்
AI இன் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு OpenAI இன் முன்னாள் ஊழியர்கள் திரண்டுள்ளனர். இந்தஓபன்ஏஐ இது வரை 1 பில்லியனில் இதுவரை 1 பில்லியன் திரட்டியுள்ளனர்,
OpenAI இன் 30 முன்னாள் ஊழியர்களைக் கொண்ட இந்தக் குழு இதுவரை $1 பில்லியனுக்கு மேல் திரட்டியுள்ளது.
அவர்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் பிற AI ஸ்டார்ட்-அப்களிலும் முதலீடு செய்கிறார்கள் .
அவர்கள், OpenAI இன் முன்னாள் இன்ஜினியரிங் VP டேவிட் லுவான், ஆராய்ச்சி விஞ்ஞானிகள் பீட்டர் சென் மற்றும் ஜோஷ் டோபின், ஆராய்ச்சியின் முன்னாள் VP டாரியோ அமோடி, முன்னாள் தொழில்நுட்ப இயக்குனர் ஆஷ்லே பிலிபிஸ்சின் என பலர் உள்ளனர்.