NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்?
    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 12, 2023 | 01:16 pm 1 நிமிட வாசிப்பு
    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்?
    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் ஸ்பேம் கால்கள்

    கடந்த சில வாரங்களாக இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா, கென்யா மற்றும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த எண்களில் இருந்து இந்திய பயனர்களுக்கு அதிகளவில் ஸ்பேம் கால்கள் வருவதாக பல்வேறு வாட்ஸ்அப் பயனர்களும் புகார் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் புதிய பிரச்சினை குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "மத்திய அமைச்சரவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்தப் பிரச்சினையைக் குறைக்க தீர்வு காணவிருப்பதாக தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.

    எப்படி இந்த புதிய பிரச்சினையை எதிர்கொள்ளவிருக்கிறது வாட்ஸ்அப்? 

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்பேம் மெஸேஜ் மற்றும் கால்களை கண்டறிந்து, பயனர்களை அடைவதற்கு முன்பாகவே அதனை பிளாக் செய்யத் திட்டமிட்டிருக்கிறது வாட்ஸ்அப். மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் ஸபேம் ஃபில்டரிங் சிஸ்டத்தின் துல்லியத்தன்மையையும் அதிகரிக்கவிருக்கிறது. இதுவரை திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இதனைச் செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப். இவை தவிர, ஸ்பேம் கால்கள் மற்றும் மெஸேஜ்களை அடையாளம் காண பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பயனர்களுக்கு எப்படி ஸ்பேம் மெஸேஜ்களை பிரித்தரிவது என்பது குறித்து கற்றுக்கொடுப்பது மற்றும் ஸ்பேம் மெஸேஜ் மற்றும் கால்களைக் கண்டறிந்தால் உடனடியாக அதிகுறித்து ரிப்போர்ட் செய்யும் வகையில் வாட்ஸ்அப் செயலியிலேயே ரிப்போர்ட்டிங் ஆப்ஷனை கொடுப்பது உள்ளிட்ட பிற முயற்சிகளையும் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Prasanna Venkatesh
    Prasanna Venkatesh
    Mail
    தொடர்புடைய செய்திகள்
    வாட்ஸ்அப்
    இந்தியா
    சைபர் கிரைம்

    வாட்ஸ்அப்

    குறுஞ்செய்திகளை 'எடிட்' செய்யும் வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்! புதுப்பிப்பு
    'வாட்ஸ்அப் நம்பகத்தன்மை இல்லாதது'.. பதிவிட்ட எலான் மஸ்க்.. என்ன காரணம்? ட்விட்டர்
    வாட்ஸ்அப்பைப் போலவே வசதிகள்.. ட்விட்டரிலும் அறிமுகம் செய்யும் எலான் மஸ்க்! ட்விட்டர்
    இனி ஸ்மார்ட்வாட்ச்சிலும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்.. விரைவில் வெளியாகும் அப்டேட்! ஆண்ட்ராய்டு

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 1,580 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு கொரோனா
    சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  கேரளா
    இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கும் சுஸூகி மோட்டார் நிறுவனம்! ஆட்டோமொபைல்
    ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்

    சைபர் கிரைம்

    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை! இந்தியா
    லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!  இன்ஸ்டாகிராம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023