NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்?
    இதனை தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என FBI தெரிவித்துள்ளது

    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 04, 2025
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில், இரண்டு சீனர்கள் மீது அமெரிக்காவிற்குள் ஒரு ஆபத்தான பூஞ்சையை கடத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

    இது உணவு மற்றும் விவசாயத்தை குறிவைக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதனை தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என FBI தெரிவித்துள்ளது.

    அப்படி இந்த பூஞ்சை என்ன செய்யும்? எப்படி இதை வேளாண் பயங்கரவாத பொருளாக பயன்படுத்த முடியும் என்பதை இந்த நேரத்தில் தெரிந்துக்கொள்வது அவசியம்.

    கூற்று

    FBI கூறுவது என்ன?

    FBI இந்த சம்பவத்தை "கடுமையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என வர்ணித்து, வேளாண் பயங்கரவாதம் என்பது உணவு வழங்கல், பொருளாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தை ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடிய சக்தியாக வளர்ந்து வருவதை வலியுறுத்தியுள்ளது.

    எனினும் இது ஒரு "ஜாம்பி பூஞ்சை" அல்ல; ஆனால், இது பயிர்களை அழிக்க, உணவுப் பதாரண்களுக்கு நச்சுகள் ஏற்படுத்த, மற்றும் பில்லியன் கணக்கான டாலர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தீவிர உயிரியல் முகவராக இருக்கக்கூடும் என FBI அச்சம் தெரிவித்துள்ளது.

    வேளாண் பயங்கரவாதம்

    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன?

    வேளாண் பயங்கரவாதம் என்பது நோய்கள், பூச்சிகள், அல்லது உயிரியல் முகவர்களை ஒரு நாட்டின் விவசாய மற்றும் உணவுப் பொருட்களை குறிவைத்து, சமூக, பொருளாதார, மற்றும் உள்நாட்டு அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயன்படுத்துவதை குறிக்கிறது.

    இது பொதுமக்களை நேரடியாக தாக்குவதில்லை, ஆனால் உணவுத் துறையின் மூலக் கழிவுகளை அழித்து, தட்டுப்பாடுகளையும் விலையுயர்வையும் உருவாக்கும்.

    ஃபுசேரியம் கிராமினேரம்

    கைப்பற்றப்பட்ட கேள்விக்குரிய பூஞ்சை: ஃபுசேரியம் கிராமினேரம்

    FBI-யால் கைப்பற்றப்பட்ட பூஞ்சை, ஃபுசேரியம் கிராமினேரம் (Fusarium graminearum) ஆகும்.

    இது, கோதுமை, பார்லி, ஓட்ஸ், சோளம் போன்ற முக்கிய தானியங்களை தாக்கும்.

    அது, தலை கருகல் நோயை ஏற்படுத்தும்.

    அதோடு, மைக்கோடாக்சின் எனப்படும் நச்சுகள் மூலம் மாசுபடுத்தும்.

    இதனால், தாவரத்தின் மகசூலை குறைப்பது மட்டுமல்லாமல், உணவாகவே தகுதியற்றதாக மாறும்.

    இந்த பூஞ்சையால் ஏற்பட்ட நோய், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க விவசாயிகளுக்கு $3-4 பில்லியன் வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளது.

    கவலை

    ஏன் இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்துகிறது?

    இந்த புஞ்சை வகை, எளிதாகக் கண்டறிய முடியாதது.

    அதோடு, வேகமாக பரவக்கூடியது மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடியது என்பதால் வேளாண் அமைப்பின் பாதுகாப்பில் ஒரு பெரிய துளை என FBI இதனை கருதுகிறது.

    இது ஒரு தனிப்பட்ட சட்ட மீறல் மட்டுமல்ல, அரசின் உள் பாதுகாப்பை சோதிக்கக்கூடிய முயற்சி என அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

    வேளாண் பயங்கரவாதம் ஒரு வளர்ந்து வரும், ஆனால் அதிகம் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சனை. இது தொடர்பான இந்த சமீபத்திய வழக்கு, உணவு பாதுகாப்பும் பாதுகாப்புக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை நினைவூட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேளாண்
    பயங்கரவாதம்
    அமெரிக்கா
    சீனா

    சமீபத்திய

    வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்? வேளாண்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் இந்த தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது சுபன்ஷு சுக்லா
    இந்தியாவின் சேவைத் துறை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு இந்தியா
    ஈரானில் கடத்தப்பட்ட 3 இந்தியர்கள் தெஹ்ரான் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர் ஈரான்

    வேளாண்

    'மரபணு எடிட்டிங்' பயன்படுத்திய முதல் அரிசி வகைகளை அறிமுகம் செய்த ICAR இந்தியா

    பயங்கரவாதம்

    "இந்தியாவில் தான் வாக்களித்தேன், ஆதார் கூட இருக்கு": 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படும் பாகிஸ்தானியர் பாகிஸ்தான்
    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அடியில் பாகிஸ்தான் சுரங்கப்பாதைகள் தோண்டியதா? ராணுவம் விசாரணை இந்திய ராணுவம்
    பஹல்காம் தாக்குதலுக்கு ஏப்ரல் 22 நண்பகலை தேர்வு செய்தது எதற்காக? மேலும் 3 டூரிஸ்ட் இடங்களும் இலக்காக இருந்ததாம்! பஹல்காம்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன? பஹல்காம்

    அமெரிக்கா

    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    சீனா

    டிரம்பின் சீன வரிகளால் இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் மலிவாகக் கிடைக்கக்கூடும் ஸ்மார்ட்போன்
    சீனா மீது கூடுதல் வரிகளை விதித்து பழிவாங்கும் டிரம்ப்; மொத்த வரி இப்போது 145% ஆக உயர்வு அமெரிக்கா
    அதிகரிக்கும் வர்த்தக பதற்றம்: அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 125% வரி விதிப்பு வர்த்தகம்
    சீனாவின் நலனுக்காக அமெரிக்காவின் பாதுகாப்பை சமரசம் செய்தாரா மார்க் ஜுக்கர்பெர்க்? பரபரப்புக் குற்றச்சாட்டு மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025