NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய UPI பயன்பாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய UPI பயன்பாடு
    இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய UPI பயன்பாடு

    இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய UPI பயன்பாடு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 05, 2023
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து யுபிஐ பிரிவர்த்தனைகள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன. 2016ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையானது, சமீப காலமாக அதிகரித்திருக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் முதன் முறையாக 1000 கோடி பணப்பரிவர்த்தனைகள் என்ற மைல்கல்லை யுபிஐ எட்டிய நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 1100 கோடி பணப்பரிவர்த்தனைகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.

    மேலும், கடந்த அக்டோபர் மாதம் ரூ.17.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது பரிவர்த்தனை அளவில் 8%-மும், பரிவர்த்தனை மதிப்பில் 8.6%-மும் யுபிஐயின் பயன்பாடு உயர்ந்திருக்கிறது.

    யுபிஐ

    முன்னணியில் இருக்கும் போன்பே: 

    இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் யுபிஐ சேவைகளை வழங்கி வந்தாலும், போன்பே நிறுவனமே அதிக அளவு பயனாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

    கடந்த சில மாதங்களில் போன்பே மூலம் மட்டும் 5 பில்லியன் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    போன்பேயைத் தொடர்ந்து, கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. யுபிஐ மூலம் கடன் வழங்கும் திட்டத்திற்கும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருப்பதையடுத்து இனி வரும் காலங்களில் இந்தியாவில் யுபிஐயின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவைக் கடந்து பிரான்ஸ், பூட்டான், நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகி நாடுகளிலும் யுபிஐ பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுபிஐ
    இந்தியா

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    யுபிஐ

    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! ஆன்லைன் மோசடி
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? வங்கிக் கணக்கு
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் இந்தியா

    இந்தியா

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார்
    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர் அமெரிக்கா
    'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்  கொரோனா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025