NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில், ஒரே மாதத்தில், 45,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்தது ட்விட்டர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில், ஒரே மாதத்தில், 45,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்தது ட்விட்டர்
    ட்விட்டர் தடை

    இந்தியாவில், ஒரே மாதத்தில், 45,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்தது ட்விட்டர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2023
    04:26 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில், சென்ற ஆண்டு, அக்டோபர் 26 முதல் நவம்பர் 25 வரை, ஒரே மாதத்தில், கிட்டத்தட்ட 45,589 கணக்குகளை தடை செய்துள்ளது, ட்விட்டர் நிறுவனம்.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அனுமதியில்லாத தனிநபர் அத்துமீறல் போன்ற காரணங்களுக்காக, இந்த கணக்குகள் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டது.

    அதுமட்டுமின்றி, நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, 3,035 கணக்குகளை நீக்கியுள்ளது .

    மொத்தத்தில், இந்தியாவில், மேற்கூறிய மாதத்தில் மட்டும், 48,624 கணக்குகளை, ட்விட்டர் தடை செய்ததுள்ளது.

    இந்தியாவில் இருந்து பெறப்பட்ட புகார்கள் பெரும்பாலானவை, துஷ்பிரயோகம்/துன்புறுத்தல், IP தொடர்பான மீறல்கள், வெறுக்கத்தக்க நடத்தை, மற்றும் தனியுரிமை மீறல் ஆகியவையே ஆகும் எனவும் ட்விட்டர் அறிக்கை கூறுகிறது.

    மேலும் படிக்க

    ட்விட்டர் தடை ஒவ்வொரு மாதமும் தொடருமா?

    கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த, IT விதிகளின் படி, 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள், மாதாந்திர இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

    அதில், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் குறிப்பிடவேண்டும்.

    அதன்படி, ட்விட்டரின் மாதாந்திர அறிக்கையில், இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து ஒரே சமயத்தில், 755 புகார்களை அதன் குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் பெற்றதாகவும், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 121 URLகளின், மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியுள்ளது.

    நீதிமன்ற உத்தரவுகளுடன் கூடிய தனிப்பட்ட பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களும், இதில் அடங்கும்.

    ட்விட்டர் அறிக்கையில், கணக்கு இடைநிறுத்தங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட 22 கணக்குகளுக்கும், பதில் அளிக்கப்பட்டதாகவும் கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்விட்டர்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ட்விட்டர்

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் பயனர் பாதுகாப்பு
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் பயனர் பாதுகாப்பு
    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர் புதுப்பிப்பு

    இந்தியா

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? தமிழ்நாடு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA காவல்துறை
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! அரசியல் நிகழ்வு
    இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025