NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
    இந்திய ரிசர்வ் வங்கி

    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 06, 2023
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், நாட்டின் நம்பகமான வங்கிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், இந்தியாவின் மூன்று பெரிய வங்கிகளான, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ரிசர்வ் வங்கியின் உள்நாட்டு அமைப்பு ரீதியாக, இவை முக்கியமான வங்கிகள் என அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

    RBIயின் கூற்றின் படி, வாடிக்கையாளரும், இந்தியப் பொருளாதாரமும், இந்த வங்கிகளை பெரிதும் நம்பியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

    ஆர்பிஐ, இந்த நிறுவனங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறது என்றும், அவற்றின் நஷ்டம் பற்றி வரும் எந்தச் செய்தியும், பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

    பட்டியலிடப்பட்ட வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான சோதனை அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    பாதுகாப்பான வங்கிகள் பட்டியல்

    RBI releases 2022 list of Domestic Systemically Important Banks (D-SIBs)https://t.co/4rUtJNjHHH

    — ReserveBankOfIndia (@RBI) January 2, 2023

    ஆர்பிஐ

    இந்தியாவில் உள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல்

    ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த வங்கிகள், தங்கள் இடர்-பணியிடப்பட்ட சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை டயர்-1 ஈக்விட்டியாகப் பராமரிக்க வேண்டும்.

    SBI, தனது ஒதுக்கப்பட்ட சொத்துக்களில் 0.60 சதவீதத்தை டயர்-1 ஈக்விட்டியாக ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும், HDFC மற்றும் ICICI வங்கி 0.20 சதவீதத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் RBI தெரிவித்துள்ளது.

    ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில், வங்கிகளின் வரம்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, ஒரு பட்டியலை, ஆர்பிஐ வெளியிடும்.

    பட்டியலிடப்பட்ட வங்கிகள், திவால் நிலையிலிருந்து பாதுகாப்பாக உள்ளன எனவும், தேவைப்பட்டால், அவர்களுக்கு உதவ, அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் RBI அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வங்கிக் கணக்கு
    இந்தியா

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    வங்கிக் கணக்கு

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சென்னை
    ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே கார்

    இந்தியா

    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் தொழில்நுட்பம்
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு மாநிலங்கள்
    சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025