Page Loader
இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2023
10:51 am

செய்தி முன்னோட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், நாட்டின் நம்பகமான வங்கிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மூன்று பெரிய வங்கிகளான, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கியின் உள்நாட்டு அமைப்பு ரீதியாக, இவை முக்கியமான வங்கிகள் என அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. RBIயின் கூற்றின் படி, வாடிக்கையாளரும், இந்தியப் பொருளாதாரமும், இந்த வங்கிகளை பெரிதும் நம்பியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆர்பிஐ, இந்த நிறுவனங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறது என்றும், அவற்றின் நஷ்டம் பற்றி வரும் எந்தச் செய்தியும், பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. பட்டியலிடப்பட்ட வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான சோதனை அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பாதுகாப்பான வங்கிகள் பட்டியல்

ஆர்பிஐ

இந்தியாவில் உள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல்

ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த வங்கிகள், தங்கள் இடர்-பணியிடப்பட்ட சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை டயர்-1 ஈக்விட்டியாகப் பராமரிக்க வேண்டும். SBI, தனது ஒதுக்கப்பட்ட சொத்துக்களில் 0.60 சதவீதத்தை டயர்-1 ஈக்விட்டியாக ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும், HDFC மற்றும் ICICI வங்கி 0.20 சதவீதத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் RBI தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில், வங்கிகளின் வரம்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, ஒரு பட்டியலை, ஆர்பிஐ வெளியிடும். பட்டியலிடப்பட்ட வங்கிகள், திவால் நிலையிலிருந்து பாதுகாப்பாக உள்ளன எனவும், தேவைப்பட்டால், அவர்களுக்கு உதவ, அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் RBI அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.