NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
    தொழில்நுட்பம்

    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 06, 2023, 10:51 am 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
    இந்திய ரிசர்வ் வங்கி

    இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், நாட்டின் நம்பகமான வங்கிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் மூன்று பெரிய வங்கிகளான, பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கியின் உள்நாட்டு அமைப்பு ரீதியாக, இவை முக்கியமான வங்கிகள் என அந்த அறிக்கையில் கூறப்படுகிறது. RBIயின் கூற்றின் படி, வாடிக்கையாளரும், இந்தியப் பொருளாதாரமும், இந்த வங்கிகளை பெரிதும் நம்பியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆர்பிஐ, இந்த நிறுவனங்களை உன்னிப்பாகக் கவனிக்கிறது என்றும், அவற்றின் நஷ்டம் பற்றி வரும் எந்தச் செய்தியும், பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. பட்டியலிடப்பட்ட வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான சோதனை அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளது.

    பாதுகாப்பான வங்கிகள் பட்டியல்

    RBI releases 2022 list of Domestic Systemically Important Banks (D-SIBs)https://t.co/4rUtJNjHHH

    — ReserveBankOfIndia (@RBI) January 2, 2023

    இந்தியாவில் உள்ள பாதுகாப்பான வங்கிகளின் பட்டியல்

    ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த வங்கிகள், தங்கள் இடர்-பணியிடப்பட்ட சொத்துக்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை டயர்-1 ஈக்விட்டியாகப் பராமரிக்க வேண்டும். SBI, தனது ஒதுக்கப்பட்ட சொத்துக்களில் 0.60 சதவீதத்தை டயர்-1 ஈக்விட்டியாக ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும், HDFC மற்றும் ICICI வங்கி 0.20 சதவீதத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் RBI தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில், வங்கிகளின் வரம்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்து, ஒரு பட்டியலை, ஆர்பிஐ வெளியிடும். பட்டியலிடப்பட்ட வங்கிகள், திவால் நிலையிலிருந்து பாதுகாப்பாக உள்ளன எனவும், தேவைப்பட்டால், அவர்களுக்கு உதவ, அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் RBI அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Venkatalakshmi V
    Venkatalakshmi V
    Mail
    சமீபத்திய
    இந்தியா
    வங்கிக் கணக்கு

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    இந்தியா

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் மத்திய பிரதேசம்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்

    வங்கிக் கணக்கு

    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023