NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!
    தொழில்நுட்பம்

    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!

    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!
    எழுதியவர் Prasanna Venkatesh
    May 25, 2023, 11:11 am 1 நிமிட வாசிப்பு
    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!
    இந்தியாவில் அதிகரித்த ரேன்சம்வேர் தாக்குதல்கள்

    இந்தியாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்பம் அல்லது சைபர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த சோபோஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம். அந்த ஆய்வு குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் அதிகளவில் ரேன்சம்வேர் தாக்குதல்களை சந்தித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு கணினியில் உள்ள தகவல்களை ஹேக் செய்து, அதனை உரிமையாளர்கள் பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து, பின்னர் அதனை விடுவிக்க பணம் கோருவதே ரேன்சம்வேர் தாக்குதல் எனப்படுகிறது.

    என்ன காரணம்: 

    இந்தியாவில் நடைபெற்ற ரேன்சம்வேர் தாக்குதல்களில் 35%, அந்நிறுவனங்களில் இருந்து பாதுகாப்புக் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கிறது. 33% தாக்குதல்களில், தேவையான தகவல்கள் கண்டறியப்பட்டு அதன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. தீங்கிழைக்கும் நோக்கத்தோடும் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், பிஷ்ஷிங் ஆகியவை மூலமாகவும் இணையத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 77% நிறுவனங்களில் தகவல்களை லாக் செய்திருக்கின்றனர், 38% நிறுவனங்களில் தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன, தகவல்கள் லாக் செய்யப்பட்டவர்களில் 44% பேர் ஹேக்கர்கள் கேட்ட தொகையைக் கொடுத்து தங்கள் நிறுவனத் தகவல்களை மீட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 85% நிறுவனங்கள் இது போன்ற இணையத் தாக்குதல்களால் தங்களுக்கு வணிக இழப்போ அல்லது வருவாய் இழப்போ நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Prasanna Venkatesh
    Prasanna Venkatesh
    Mail
    இந்தியா
    சைபர் கிரைம்

    இந்தியா

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  நாடாளுமன்றம்
    நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை! சைபர் கிரைம்
    பல தடைகளை தாண்டி UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி  இந்தியா
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹைதராபாத்

    சைபர் கிரைம்

    வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்? வாட்ஸ்அப்
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை! புதுச்சேரி
    லைக்ஸ் பாலோவர்ஸ்களை அதிகரிக்க செய்வதாக நூதன மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை!  இன்ஸ்டாகிராம்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023