NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!
    இந்தியாவில் அதிகரித்த ரேன்சம்வேர் தாக்குதல்கள்

    இந்திய நிறுவனங்களின் மீது அதிகரித்த ரேன்சம்வேர் இணையத் தாக்குதல்கள்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 25, 2023
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவைச் சேர்ந்த 300 நிறுவனங்கள் உட்பட உலகம் முழுவதும் 14 நாடுகளைச் சேர்ந்த 3000 தகவல் தொழில்நுட்பம் அல்லது சைபர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்றை நடத்தியது பிரிட்டனைச் சேர்ந்த சோபோஸ் சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

    அந்த ஆய்வு குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் அதிகளவில் ரேன்சம்வேர் தாக்குதல்களை சந்தித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    ஒரு கணினியில் உள்ள தகவல்களை ஹேக் செய்து, அதனை உரிமையாளர்கள் பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்து, பின்னர் அதனை விடுவிக்க பணம் கோருவதே ரேன்சம்வேர் தாக்குதல் எனப்படுகிறது.

    இணையத் தாக்குதல்

    என்ன காரணம்: 

    இந்தியாவில் நடைபெற்ற ரேன்சம்வேர் தாக்குதல்களில் 35%, அந்நிறுவனங்களில் இருந்து பாதுகாப்புக் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கிறது. 33% தாக்குதல்களில், தேவையான தகவல்கள் கண்டறியப்பட்டு அதன் மூலம் நிகழ்ந்திருக்கிறது.

    தீங்கிழைக்கும் நோக்கத்தோடும் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், பிஷ்ஷிங் ஆகியவை மூலமாகவும் இணையத் தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.

    பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 77% நிறுவனங்களில் தகவல்களை லாக் செய்திருக்கின்றனர், 38% நிறுவனங்களில் தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன, தகவல்கள் லாக் செய்யப்பட்டவர்களில் 44% பேர் ஹேக்கர்கள் கேட்ட தொகையைக் கொடுத்து தங்கள் நிறுவனத் தகவல்களை மீட்டிருக்கிறார்கள்.

    பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் 85% நிறுவனங்கள் இது போன்ற இணையத் தாக்குதல்களால் தங்களுக்கு வணிக இழப்போ அல்லது வருவாய் இழப்போ நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  இந்தியா

    இந்தியா

    மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா ஹாக்கி போட்டி
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் மத்திய அரசு
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது  கலவரம்
    கான்பூர் முதல் சென்னை வரை: இந்திய மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில் படங்களை உருவாக்கிய AI  இன்ஸ்டாகிராம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025