NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செயற்கை தோல்: மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் முயற்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செயற்கை தோல்: மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் முயற்சி
    செயற்கை தோல்

    தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செயற்கை தோல்: மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் முயற்சி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2023
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல பிரெஞ்சு நிறுவனமான உர்கோ, ஒரு வகையான செயற்கை தோலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    'ஸ்கின் கிராஃப்ட்டிங்' எனப்படும், வலி நிறைந்த சிகிச்சைக்கு மாற்றாக, இது இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

    தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கிறது.

    அமெரிக்கா டாலர் மதிப்பில் 106 மில்லியன் செலவில், 'ஜெனிசிஸ்' ப்ரொஜெக்ட்டின் கீழ், இப்படி ஒரு திட்டம் செயலாக்கப்பட்டு வருகிறது.

    'ஹோலி கிரெயில் ஆஃப் வூண்ட் ட்ரீட்மெண்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டம், ஒரு சாத்தியமான தீர்வைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    மேலும், அந்த கண்டுபிடிப்பு, 2030 க்குள் தயாராக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    மேலும் படிக்க

    செயற்கை தோல் பற்றிய கூடுதல் விவரங்கள்

    வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது மற்றும் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது உட்பட தோலின் அனைத்து செயல்பாடுகளையும், மீண்டும் உருவாக்க முடியும் என்று டிஉர்கோவின், மருத்துவப் பிரிவின் தலைவர், குய்ரெக் லு லூஸ் விளக்கினார்.

    மனித சருமத்தில் இருக்கும் அதே நிலைத்தன்மையைப் பிரதிபலிக்க, ஆராய்ச்சியாளர்கள் உயிருள்ள செல்களை முறையாகப் பாதுகாத்துள்ளனர்.

    1800 களில் இருந்தே Urgo மருத்துவ ஆடைகளை தயாரித்து வருகிறது.

    "2000 களில் இருந்து, மருத்துவ சிக்கல்களை சரிசெய்யும் பொருட்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். மருத்துவ ஆடைகள் அறிவியல் மாற்றத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு தகுந்தாற்போல், அவை செயல்படும்," என்று உர்கோவின் ஆராய்ச்சி இயக்குனர் லாரன்ட் அபெர்ட் கூறினார்.

    மேலும் இந்த திட்டத்தை "மருத்துவத்தில் ஒரு புரட்சி" என்று குறிப்பிடுகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    தொழில்நுட்பம்

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! இந்தியா
    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா இந்தியா
    தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர் இந்தியா

    தொழில்நுட்பம்

    Spotify பிரீமியம் சந்தா இப்போது 2 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால்...?! தொழில்நுட்பம்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் 5G
    ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன? தொழில்நுட்பம்
    ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கிய நபர்! பயனர் பாதுகாப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025