NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா?
    ஆண்ட் குழுமத்தின் நிறுவனர், ஜாக் மா

    ஆண்ட் குழுமத்தில் இருந்து தனது பிடியை தளர்க்க போகிறாரா ஜாக் மா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 09, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவை நிறுவிய ஜாக் மா, ஆண்ட் குழுவில் 50% க்கும் அதிகமான பங்கு வைத்திருக்கிறார்.

    இதன் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை நேரடியாகவும், மறைமுகமாகவும், அவர் கட்டுப்பாட்டில் வைத்திருத்ததாக தெரிகிறது.

    ஆண்ட் குழுமத்தின் நிறுவனர், ஜாக் மா, அந்நிறுவனப் பங்குதாரர்களின் ஒழுங்குமுறை நடைமுறைக்கு பிறகு, நிறுவனத்தின் கட்டுப்பாட்டை விட்டு கொடுக்க போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த ஒழுங்கு முறை நடவடிக்கை, ஜாக் மாவின் ஒப்புதலின் அடிப்படையிலேயே நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

    "ஒழுங்குமுறை நடைமுறைக்கு பிறகு, எந்த ஒரு பங்குதாரரும், தனியாகவோ அல்லது கூட்டாகவோ, ஆண்ட் குழுமத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டிருக்க மாட்டார்கள்" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஆண்ட் குழுமம், அலி பே எனும் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியையும் நடத்துகிறது.

    ஜாக் மா

    சீன அரசின் செயல்படுகளை விமர்சித்த ஜாக் மா

    2 ஆண்டுகளுக்கு முன்னர், சீன அரசின் நிதி கொள்கையையும், அதன் நிதி அமைச்சரவையும் கடுமையாக விமர்சித்தார் ஜாக் மா.

    சீனாவின் பாரம்பரிய வங்கிகள் "அடகு கடை மனப்பான்மையைக்" கொண்டிருப்பதாக அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக, சீன அதிகாரிகள், அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்த, ஆண்ட் குழுமத்தின் 37 பில்லியன் டாலர் ஐபிஓவை, முக்கிய பிரச்சனைகளை மேற்கோள் காட்டி, கடைசி நேரத்தில் நிறுத்தினர்.

    இது பழிவாங்கும் நடவடிக்கையாக கருதப்பட்டு, உலகெங்கிலும் பலவித கண்டனங்களைப் பெற்றது.

    அதனை தொடர்ந்து 3 மாதங்கள், ஜாக் மா வெளியுலகில் இருந்து தலைமறைவானார்.

    பல நாட்களுக்கு பிறகு, அந்நிறுவனத்தின் விழா ஒன்றில் ஆன்லைனில் பங்கேற்ற ஜாக் மா, அன்று முதல் பொதுவெளியில் உரையாடுவதையும் தவிர்த்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிக செய்தி
    சீனா

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    வணிக செய்தி

    70 சதவிகித ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு - ரூ.10,431 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனம் இந்தியா
    உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம் ரஷ்யா

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025