NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை
    டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

    டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 24, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களின் உருவாக்கமும், பரவலும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, இந்த டீப் ஃபேக் வீடியோக்களின் நம்பகத்தன்மை தான் மிகவும் பிரச்சினைக்குரிய விஷயமாக இருக்கிறது.

    பிரபலங்களின் முகங்களை வைத்து உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களில் நிஜம் எது போலி எது என்றே தெரியாத அளவிற்கு மிகவும் துல்லியமாக அவை உருவாக்கப்பட்டு வருகின்றன.

    இப்படியான தொழில்நுட்பங்களை மிகவும் பொறுப்புடன் நாம் கையாள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார்.

    இந்நிலையில், அதிகரித்து வரும் இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

    இந்தியா

    டீப் ஃபேக் வீடியோக்களின் உருவாக்கம் மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: 

    தகவல் தொழில்நுட்ப விதிமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து புகாரளிக்க மற்றும் தெரியப்படுத்த புதிய வலைத்தளம் ஒன்றை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை புதிய வலைத்தளம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர்.

    அத்தளத்தின் உதவியுடன் தகவல் தொழில்நுட் விதிமீறல் குறித்து முதல் தகவல் அறிக்கையையும் பயனாளர்கள் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்.

    இந்த முதல் தகவல் அறிக்கையானது குறிப்பிட்ட தளத்தின் அதிகாரிகள் மீதே பதிவு செய்யப்படும் எனவும், ஒரு உள்ளடக்கம் எங்கிருந்து பகிரப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவதைத் தொடர்ந்து, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு மாற்றப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

    ஏழு நாட்களுக்குள் இதற்கேற்றவாது தங்களது விதிமுறைகள் நிறுவனங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

    தொழில்நுட்பம்

    போலி தகவல்களைத் தடுக்க ஆன்லைன் தளங்களே பொறுப்பு: 

    டீப் ஃபேக் போன்ற தவறான மற்றும் போலியான உள்ளடக்கங்கள் பகிரப்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு ஆன்லைன் தளங்களுக்கே அதிகமாக இருக்கிறதென சுட்டிக்காட்டியிருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

    அதன்படி, ஒரு உள்ளடக்கம் தவறானது அல்லது போலியானது என பயனாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட 36 மணி நேரத்திற்குள், அந்த உள்ளடக்கத்தை நீக்க ஆன்லைன் தளங்கள் நீக்கியாக வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

    டீப் ஃபேக் வீடியோக்கள் போன்ற போலியான மற்றும் தவறான உள்ளடக்கங்களை உருவாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு
    இந்தியா

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    தொழில்நுட்பம்

    அக்டோபரில் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் ப்ராசஸர்களை வெளியிடும் குவால்காம் தொழில்நுட்பம்
    AI முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை.. அப்டேட்களை 'அள்ளிப் போட்டு' வந்த 'மெட்டா கனெக்ட்' நிகழ்வு! மெட்டா
    உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா செயற்கை நுண்ணறிவு
    பார்டு சாட்பாட்டில் 'நினைவு கொள்ளும்' புதிய வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்

    தொழில்நுட்பம்

    ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள் கூகுள்
    தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதைக் குறைக்க கூகுள் புதிய நடவடிக்கை கூகுள்
    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்? வணிகம்
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கருவிகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கும் அடோப் தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு

    பொய்யான, தவறான தகவல்கள் மற்றும் செய்திகளை வடிகட்ட முடியாத AI சாட்பாட்கள் சாட்ஜிபிடி
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்டிக்கரை உருவாக்கும் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்  வாட்ஸ்அப்
    நீங்கள் அழுத்தும் key-இன் ஓசையை வைத்தே உங்கள் பாஸ்வேர்டைக் கண்டறியும் AI கருவிகள் தொழில்நுட்பம்
    AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்ட மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட்

    இந்தியா

    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது  க்ரைம் ஸ்டோரி
    சட்டம் பேசுவோம்: டீப்ஃபேக் வீடியோக்களுக்கு எதிரான இந்திய சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  சட்டம் பேசுவோம்
    நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம் இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025