NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3
    வெற்றிகரமார நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3

    வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 23, 2023
    06:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்திய மக்களின் நான்கு ஆண்டுக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. விண்ணில் செலுத்தப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3.

    கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளைக் கடந்து வெற்றிகரமாக இன்று தரையிறங்கியிருக்கிறது.

    இறுதிக்கட்ட பரபரப்புகளுக்கு இடையிலும், திட்டமிட்டபடி சரியாக மாலை 5.44-க்குத் தொடங்கி, 6.04க்கு நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிங்கியிருக்கிறது சந்திரயான் 3.

    சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, பிரஞ்யான் ரோவரும் நிலவின் மேற்பரப்பில் இந்தியாவின் கால்தடைத்தைப் பதித்திருக்கிறது. இஸ்ரோவின் இந்த சாதனையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    சந்திரயான் 3:

    வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான் 3:

    நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நிலவின் தரையிறக்கம் தானியங்கி முறையில் மேற்கொள்ளப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் நிலைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், பதற்றமான மூன்றாம் நிலை தொடங்கியது.

    சந்திரயான் 2 திட்டத்தின் போது, இந்த மூன்றாம் நிலையிலேயே லேண்டருடனான தொடர்பை இழந்து தோல்வியைடந்தது இஸ்ரோ. தற்போது அந்த நிலையில் எந்தப் பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாகத் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3.

    ஒட்டுமொத்த தரையிறக்க நிகழ்விலும் எந்த விதமான தடங்களுக்கும் இன்றி நிலவின் தென் துருவப் பகுதியில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தியிருக்கிரது இஸ்ரோ.

    நான்காவது நாடாக இந்த சாதனையை படைத்திருக்கிறது இந்தியா.

    இஸ்ரோ

    சந்திரயான் 3

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள தென்னாபிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆன்லைன் மூலமாக விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பார்த்து ரசித்தார்.

    சந்திரயான்-3 தரையிங்கி இருக்கும் தென் துருவ பகுதியில் தான் 2009ஆம் ஆண்டு நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன. 2009ஆம் ஆண்டு, சந்திரயான்-1இல் பொருத்தப்பட்டிருந்த நாசா கருவி தான் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதனால், சந்திரயான்-3இன் இந்த மிகப்பெரிய வெற்றி, உலக விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு கூட்டி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திராயன்-3, கடந்த ஜூலை 14ஆம் தேதி LVM 3 ஹெவி-லிஃப்ட் ஏவுகணையின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.

    தற்போது வெற்றிகரமாக அனைத்துத் தடைகளையும் கடந்து நிலவில் கால்பதித்திருக்கிரது சந்திரயான் 3.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Chandrayaan-3 Mission:
    'India🇮🇳,
    I reached my destination
    and you too!'
    : Chandrayaan-3

    Chandrayaan-3 has successfully
    soft-landed on the moon 🌖!.

    Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3

    — ISRO (@isro) August 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    இஸ்ரோ
    விண்வெளி
    சந்திரன்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    இஸ்ரோ

    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ நாசா
    ஜுலை 14 விண்ணில் பாய்கிறது சந்திராயன் 3:இஸ்ரோ இந்தியா
    சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் விண்வெளி
    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன? சந்திரன்

    விண்வெளி

    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்? இஸ்ரோ
    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்
    நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்? சந்திரன்

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025