விண்வெளியில் இஸ்ரோவின் 'பாகுபலி'! அதிக எடை கொண்ட சாட்டிலைட்டை சுமந்து சென்று LVM3-M6 சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(ISRO) இன்று மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த 'பாகுபலி' ராக்கெட் என்று அழைக்கப்படும் LVM3-M6, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது. இன்று காலை 8:55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் சுமார் 6,100 கிலோ எடை கொண்ட புளூபேர்ட் பிளாக்-2 என்ற செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது. அமெரிக்காவின் 'ஏஎஸ்டி ஸ்பேஸ் மொபைல்' நிறுவனத்திற்காக இஸ்ரோவின் NSIL மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Liftoff!#LVM3M6 launches the BlueBird Block-2 spacecraft from SDSC SHAR.
— ISRO (@isro) December 24, 2025
Youtube Livestreaming link:https://t.co/FMYCs31L3j
For More information Visit:https://t.co/PBYwLU4Ogy
#LVM3M6 #BlueBirdBlock2 #ISRO #NSIL
முக்கியத்துவம்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்
இந்த புளூபேர்ட் செயற்கைக்கோள், உலகெங்கிலும் உள்ள சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக அதிவேக செல்லுலார் பிராட்பேண்ட் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, செல்போன் கோபுரங்கள் இல்லாத இடங்களிலும் விண்வெளி மூலம் நேரடி 4G/5G சேவையைப் பெற முடியும். அமெரிக்காவை தளமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், இந்த பயன்பாட்டை தங்கள் தொகுப்பில் ஒரு முக்கிய படியாக பாராட்டியது. தரை கோபுரங்கள் இல்லாமல் தடையற்ற பிராட்பேண்ட் கொண்ட Starlink உடன் இந்த நிறுவனம் போட்டியிடுகிறது.
வணிக வெற்றி
இஸ்ரோவின் வணிக வெற்றி
இந்த வெற்றியின் மூலம், சர்வதேச அளவில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் நம்பகமான விண்வெளி மையமாக இந்தியா மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது. இதற்கு முன்பு 4,400 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளே அதிகபட்ச எடையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. "நமது விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது" என இஸ்ரோ அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.