Page Loader
இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்
UPI கட்டணத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ்

இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 12, 2024
04:52 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகள், திங்களன்று இலங்கை மற்றும் மொரிஷியஸில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெய்நிகர் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் கலந்து கொண்டனர். இரு நாடுகளுடனும் இந்தியாவின் அதிகரித்து வரும் பொருளாதார உறவுகளுக்கு மத்தியில் இலங்கை மற்றும் மொரிஷியஸில் இந்தியவின் UPI சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் பயணிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கும், இந்தியாவுக்குப் பயணிக்கும் மொரிஷியஸ் பிரஜைகளுக்கும் UPI மூலம் பணபரிமாற்றங்கள் செய்ய ஏதுவாக இந்த அறிமுகம் உதவுகிறது.

யுபிஐ

இந்தியாவின் UPI அனுமதிக்கும் மற்ற நாடுகள்

இந்த மாத தொடக்கத்தில், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்குச் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI பொறிமுறையின் மூலம் டிக்கெட்டுகளை வாங்க பிரான்ஸ் அனுமதித்தது. UPI கட்டணத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ். இந்த UPI சேவை ஐரோப்பிய நாட்டிலுள்ள மற்ற சுற்றுலா மற்றும் சில்லறை வணிகர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் UAE இன் உடனடி பணம் செலுத்தும் தளம் (IPP) ஆகியவற்றுக்கு இடையே தடையற்ற இணைப்பை வழங்கவதை உறுதி செய்தது.