2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்கபோகும் கூகிள்
கூகிள் நிறுவனம், எதிர்வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்க, 2 ஆண்டுகளுக்கும் மேலாக கூகிளின் எந்த ஒரு செயலிலையும் உபயோகிக்காமல் இருக்கும் கணக்குகளை கண்டறிந்து, அவற்றை முடக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறைந்தபட்சம், அவ்வப்போது மின்னஞ்சல்களை செக் செய்திருக்கவேண்டும், இல்லையேல் யூடியூபில் வீடியோக்களை பார்க்க பயன்படுத்தி இருக்க வேண்டும். இது எதுமே செய்யாத கணக்குகள் தான் முடங்கும் அபாயம் உள்ளது. இதற்கான அதிகாரம் தங்களிடம் இருப்பதாக கூகிள் தெரிவித்துள்ளது. இதனால் தங்கள் பயனர்களிடம், இதுவரை தங்கள் கணக்குகளை பயன்படுத்தாமல் இருந்தால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்படுத்துமாறும், இல்லையேல் அது முடக்கப்படும் என அறிவித்துள்ளது.