செவ்வாய் கிரகத்திற்கு பதில் நிலவில் நகரம்! எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை அமைப்பதை விட, நிலவில் ஒரு "சுயமாக வளரும் நகரத்தை" உருவாக்குவதே வேகமான மற்றும் யதார்த்தமான இலக்கு என்று அறிவித்துள்ளது. எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், நிலவில் நகரம் அமைக்கும் பணியை பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரக திட்டங்கள் நீண்ட கால இலக்காக தொடர்ந்தாலும், தற்போதைய முன்னுரிமை நிலவுக்கே அளிக்கப்படுகிறது என்று மஸ்க் விளக்கியுள்ளார்.
காரணம்
செவ்வாய் கிரகத்திற்கு பதிலாக நிலவை தேர்வு செய்தது ஏன்?
செவ்வாய் கிரகத்தை விட நிலவு பூமிக்கு மிக அருகில் இருப்பதால், அங்கு அடிக்கடி விண்கலங்களை அனுப்ப முடியும் என்று மஸ்க் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், நிலவிற்கு செல்ல வெறும் 2 நாட்கள் மட்டுமே ஆகும்; ஆனால் செவ்வாய்க்கு செல்ல 6 மாதங்கள் தேவை என்பதால் இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். நிலவிற்கு 10 நாட்களுக்கு ஒருமுறை விண்கலங்களை ஏவ முடியும்; ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே (கோள்களின் வரிசை அமைப்பு காரணமாக) விண்கலங்களை அனுப்ப முடியும். இதனால், தொழில்நுட்ப ரீதியாக நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது மிகவும் எளிது என்று அவர் கருதுகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
For those unaware, SpaceX has already shifted focus to building a self-growing city on the Moon, as we can potentially achieve that in less than 10 years, whereas Mars would take 20+ years.
— Elon Musk (@elonmusk) February 8, 2026
The mission of SpaceX remains the same: extend consciousness and life as we know it to…