NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்
    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்
    வாட்சப் கம்யூனிட்டி

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 11, 2022
    09:00 pm

    செய்தி முன்னோட்டம்

    மெட்டாவுக்குச் சொந்தமான வாட்சப், சமீபத்தில் அதன் புதியஅம்சமான கம்யூனிட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது.

    ஒரே சமூகத்தை சேர்ந்த பல குழுக்களை ஒன்றிணைக்க உருவாக்க பட்டது தான் இந்த கம்யூனிட்டி.

    உதாரணமாக அலுவலகம் சார்ந்த தனித்தனி குரூப்கள், கல்லூரி சார்ந்த தனி குரூப்கள், அபார்ட்மெண்ட் முகவர்கள் இவற்றையெல்லாம் ஒரே குடையின் கொண்டுவருவது போன்றதொரு அமைப்பு.

    இதன்மூலம் பயனர்கள் 20 வாட்சப் குழுக்களை ஒன்றிணைத்து ஒரு சமூகத்தை உருவாக்க அனுமதிக்கிறது.

    இது ஒரு ஒளிபரப்பு சேவை. முக்கிய அறிவிப்புகளைப் பகிரவும், தினசரி நிகழ்வுகளை பற்றி கூறவும் உதவுகிறது.

    இந்த கம்யூனிட்டில் பொது அறிவிப்புகள், தினசரி வாக்கெடுப்புகள் போன்ற வசதிகளும் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

    ஸ்லாக், டிஸ்கார்ட் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க:

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப்

    கம்யூனிட்டி வசதி ஏப்ரல் மாதத்தில் மெட்டா நிறுவனத்தால் முதன்முதலில் சோதிக்கப்பட்டது.

    இந்த கம்யூனிட்டி சேவை-இல் வீடியோ கால், ஆடியோ கால் வசதி இல்லை.

    உறுப்பினர்கள் தங்கள் வாட்சப் குரூப்-இல் வீடியோ கால் சேவையை தொடரலாம்.

    இதே போல், வாட்சப் வீடியோ கால் வசதியையும் மேம்படுத்தி உள்ளது மெட்டா நிறுவனம்.

    இதன் மூலம் ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ அழைப்புகளில் பங்கேற்கலாம்.

    மேலும் வாட்சப் குழு அளவை 512 இலிருந்து 1024 நபர்களாக உயர்த்தியுள்ளது.

    இதனால் கம்யூனிட்டி சேவையின் குழு அளவு 21500 வரை அனுமதிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025