NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்
    தொழில்நுட்பம்

    டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்

    டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்
    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2023, 04:26 pm 1 நிமிட வாசிப்பு
    டிசம்பர் மாதத்தில், ரூ.12.82 லட்சம் கோடியை எட்டிய யுபிஐ பேமெண்ட்கள்
    யுபிஐ பேமெண்ட்

    அன்றாட பண பரிமாற்றத்திற்கு, இந்தியாவில் பலரும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்படுத்துகிறார்கள். இந்த UPI மூலம், டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற பணபரிமாற்றத்தின் மதிப்பு, அதிகபட்சமாக ரூ.12.82 லட்சம் கோடியைத் தொட்டது என ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை உபாயம், டிசம்பர் மாதத்தில், 782 கோடி பரிவர்த்தனைகள் கண்டது எனவும் தெரிவித்துள்ளது. ''நாடு முழுவதும் டிஜிட்டல் பேமெண்ட் புரட்சியை ஏற்படுத்துவதில், UPI பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. டிசம்பர் 2022 இல், யுபிஐ ஆனது Rs.12.82 டிரில்லியன் மதிப்புள்ள 7.82 பில்லியன் பரிவர்த்தனைகளைத் தாண்டியுள்ளது,'' என நிதிச் சேவைத் துறை, ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

    யுபிஐ பேமெண்ட்

    UPI has made major contribution in ushering digital payment revolution in the country. In December 2022, UPI has crossed 7.82 billion transactions worth ₹12.82 trillion.

    Building #DigitalIndia. pic.twitter.com/P6MCiPlVd4

    — DFS (@DFS_India) January 2, 2023

    யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம்

    மேலும் சென்ற ஆண்டு, அக்டோபரில் UPI மூலம் செலுத்தப்பட்ட பணம், ரூ.12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நவம்பரில், யுபிஐ மூலம் ரூ.11.90 லட்சம் கோடி மதிப்பிலான 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. UPI என்பது உடனடி நிகழ்நேர கட்டணமில்லா, வங்கிகளுக்கு இடையேயான, பியர்-டு-பியர் (P2P) ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. மேலும் இது தனி நபரின் மொபைலின் மூலமே செய்து விடும் அளவிற்கு எளிதானது. இதனால் அநேக மக்களால் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. தற்போது வரை, நாடெங்கிலும் 381 வங்கிகள் அதைச் செயல்படுத்துகின்றன. கடந்த ஆண்டில் மட்டுமே, UPI பாரிவர்தனைகளின் அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் வியத்தகு வளர்ச்சி அடைந்துள்ளதாக, வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Venkatalakshmi V
    Venkatalakshmi V
    Mail
    சமீபத்திய
    இந்தியா
    பணம் டிப்ஸ்

    சமீபத்திய

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா

    இந்தியா

    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா

    பணம் டிப்ஸ்

    உங்கள் ரிடைர்மென்ட் வாழ்க்கை குறித்து பிளான் செய்வதற்கு சில டிப்ஸ் மன ஆரோக்கியம்
    பணம் வாங்க QR Code-யை இப்படி பயன்படுத்தாதீங்க! மொத்த பணமும் போய்விடும்; எச்சரிக்கை தொழில்நுட்பம்
    இனி UPI PIN இல்லாமல் பணம் அனுப்பலாம்! Paytm புதிய வசதி அறிமுகம் தொழில்நுட்பம்
    உங்கள் பணத்தை திருப்பித் தருமாறு உங்கள் நண்பரிடம் எவ்வாறு கேட்கலாம்? வாழ்க்கை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023