Loading...
சீனா தனது அரசாங்க கணினி அமைப்புகளிலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸை நீக்கத் தொடங்கியுள்ளது
கணினி அமைப்புகளிலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸை நீக்கத் தொடங்கியுள்ளது சீனா

சீனா தனது அரசாங்க கணினி அமைப்புகளிலிருந்து மைக்ரோசாப்ட் விண்டோஸை நீக்கத் தொடங்கியுள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2026
05:27 pm

செய்தி முன்னோட்டம்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தின் மீதான சார்பைக் குறைக்கும் தனது பரந்த உத்தியின் ஒரு பகுதியாக, அரசு நிறுவனங்களுக்கான மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 10 பதிப்பை சீனா நிறுத்தி வருகிறது. இந்த முடிவை சீன அரசின் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ளதுடன், சில அரசு சார்ந்த நிறுவனங்களை தங்களது கணினிகளிலிருந்து இந்த தனிப்பயனாக்கப்பட்ட இயங்குதளத்தை நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. திட்டமிடப்பட்ட காலத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஒரு முக்கிய அமெரிக்கத் தொழில்நுட்பத் தயாரிப்பு குறித்து பெய்ஜிங்கிற்கு வளர்ந்து வரும் அதிருப்தியை எடுத்துக்காட்டுகிறது.

தொழில்நுட்ப மாற்றம்

இந்த OS, CMIT ஆல் உருவாக்கப்பட்டது

படிப்படியாக நிறுத்தப்பட்டு வரும் விண்டோஸ் 10-இன் குறிப்பிட்ட பதிப்பானது, மைக்ரோசாப்ட் மற்றும் அரசுக்கு சொந்தமான சைனா எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி குரூப் கார்ப் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சி&எம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் கோ(CMIT)-ஆல் உருவாக்கப்பட்டது.

விண்டோஸ் 10, பெய்ஜிங்கின் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, CMIT 2016-ல் நிறுவப்பட்டது.

வெளிநாட்டு தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு எதிரான அரசாங்கத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அந்த மென்பொருள் முதலில் 2027 பிப்ரவரியில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

உள்நாட்டு மாற்றம்

சீனா உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை ஊக்குவித்து வருகிறது

ராணுவம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை சீனா ஊக்குவித்து வருகிறது.

விண்டோஸுக்கு மாற்றாகப் பல சீன நிறுவனங்கள் தங்களின் சொந்த இயக்க முறைமைகளை உருவாக்கியுள்ளன.

அவற்றுள் கைலின் சாஃப்ட்வேர் மற்றும் டோங்சின் சாஃப்ட்வேர் டெக்னாலஜி ஆகியவை அடங்கும்.

தொழில்நுட்ப சுதந்திரம் என்ற தனது இலக்கை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், வெளிநாட்டு பிராண்ட் கணினிகளுக்குப் பதிலாக உள்நாட்டு கணினிகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு நிறுவனங்களுக்கு அந்த நாடு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

செயற்கை நுண்ணறிவு சார்ந்திருத்தல்

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் சீனாவின் முயற்சிகள்

என்விடியாவிடமிருந்து மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு முடுக்கிகள் கிடைக்காத நிலையில், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு தேவையான சில்லுகளுக்காக, சீனா ஹுவாவி டெக்னாலஜிஸ் மற்றும் கேம்ப்ரிகான் டெக்னாலஜிஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை நாடி வருகிறது.

தேசிய பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், CMIT-இன் விண்டோஸ் 10, சீனாவில் உருவாக்கப்பட்ட கூடுதல் இணையப் பாதுகாப்பு அம்சங்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், சில உள்ளமைந்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT