NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ
    வரும் ஜூலை 14 நண்பகல் 2.35 மணிக்கும் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது சந்திராயன்-3

    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 11, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    சந்திராயன்-2 திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து சந்திராயன்-3 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

    சந்திராயன்-2 திட்டமானது வெற்றியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். அதாவது, எப்படி எல்லாம் திட்டத்தை வெற்றிகரமாக சாத்தியப்படுத்துவது என்பதை ஆலோசித்து உருவாக்கப்பட்ட திட்டம்.

    ஆனால், இந்த முறை அந்தத் தோல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தோல்விகளை அடிப்படையாகக் கொண்ட திட்டமாக, சந்திராயன்-3 திட்டமிட்பபட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.

    எந்தெந்த வகையில் எல்லாம் இந்தத் திட்டம் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது ஆராயப்பட்டு, அதனை தடுப்பதற்கான பல்வேறு வகையான வசதிகள் இந்தத் திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    இஸ்ரோ

    ஏன் தோல்வியடைந்தது சந்திராயன்-2 திட்டம்? 

    சந்திராயன்-2 திட்டத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது இஸ்ரோ.

    நிலவின் மேற்பரப்பை நெருங்கும் போது, லேண்டரின் வேகத்தைக் குறைக்க ஐந்து இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. இது தேவைக்கும் அதிகமான உந்துவிசையைக் கொடுத்து லேண்டரின் திசையை மாற்றியிருக்கிறது.

    விண்கலத்தின் வேகத்திற்கு உடனடியாக ஈடுகொடுக்கும் அளவிற்கு மென்பொருள் திறன் இல்லாததும் சந்திராயன்-2வின் தோல்விக்கு ஒரு காரணம்.

    தரையிறங்க வேண்டிய இடம் 500மீ சதுரடி என்ற குறைவான அளவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இதனால், தரையிறங்கும் இடத்தை சரியாக லேண்டரால் அடைய முடியவில்லை.

    இப்படி பல்வேறு வகையில் ஏற்பட்ட கோளாறுகள் ஒன்றுசேர்ந்து ஒட்டு மொத்தமாக, திட்டத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. ஆனால், தற்போது அந்தக் கோளாறுகளை எதிர்கொள்ளும் விதமாக புதிய திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    சந்திராயன்-3 திட்டம் குறித்து விளக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்:

    #WATCH | ISRO chief S Somanath gives details on Chandrayaan-3; says, "...In nutshell if you tell what was the problem in Chandrayaan-2, it is simple to say that the ability to handle parameter variation or dispersion was very limited. So, what we did this time is simply expand it… pic.twitter.com/RhOCntcEEV

    — ANI (@ANI) July 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    விண்வெளி
    இந்தியா
    அறிவியல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இந்தியா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை விண்வெளி

    விண்வெளி

    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  சீனா
    வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்!  எலான் மஸ்க்
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! உலகம்
    விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி!  நாசா

    இந்தியா

    மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன் கால்பந்து
    SCO மாநாடு: சீனாவின் BRI திட்டத்தை ஆதரிக்க மறுத்தது இந்தியா சீனா
    இந்தியாவில் ஒரே நாளில் 56 கொரோனா பாதிப்பு கொரோனா
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரினார் அஜித் பவார் மகாராஷ்டிரா

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025