LOADING...
வங்கியாளர்களுக்கு அதிர்ச்சி! 2030க்குள் 2 லட்சம் பேருக்கு வேலை காலி; ஏஐயின் அடுத்த டார்கெட் வங்கித் துறையா?
2030க்குள் ஐரோப்பாவில் 2 லட்சம் வங்கி வேலைவாய்ப்புகள் காலியாகும் என தகவல்

வங்கியாளர்களுக்கு அதிர்ச்சி! 2030க்குள் 2 லட்சம் பேருக்கு வேலை காலி; ஏஐயின் அடுத்த டார்கெட் வங்கித் துறையா?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2026
05:46 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய வங்கித் துறையில் சுமார் 2,12,000 வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது. ஐரோப்பாவின் 35 பெரிய வங்கிகளை ஆய்வு செய்ததில், அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தப் பணியாளர்களில் 10 சதவீதம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பின்வரும் பிரிவுகளில் அதிகப் பாதிப்பு இருக்கும்:

துறைகள்

அதிகம் பாதிப்பு ஏற்படும் பிரிவுகள்

பேக்-ஆபிஸ் செயல்பாடுகள் (Back-office Operations): தரவுப் பதிவேற்றம் மற்றும் நிர்வாகப் பணிகள். ரிஸ்க் மேனேஜ்மென்ட் (Risk Management): கடன் அபாயங்களைக் கணக்கிடுதல். இணக்கப் பணிகள் (Compliance): விதிமுறை மீறல்களைக் கண்காணித்தல். இந்தத் துறைகளில் செய்யப்படும் வேலைகள் மீண்டும் மீண்டும் செய்யக்கூடியவையாகவும் (Repetitive), தரவுகள் சார்ந்தவையாகவும் இருப்பதால், இவற்றை ஏஐ அல்காரிதம்கள் மனிதர்களை விட வேகமாகச் செய்து முடிக்கும்.

வங்கிகள்

வங்கிகளின் அதிரடித் திட்டங்கள்

ஏற்கனவே சில முன்னணி வங்கிகள் தங்களின் ஆட்குறைப்புத் திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன: ABN Amro வங்கி: வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் தனது மொத்தப் பணியாளர்களில் 20 சதவீதம் பேரை (ஐந்தில் ஒரு பங்கு) நீக்கத் திட்டமிட்டுள்ளது. Société Générale வங்கி: போட்டித்தன்மையை அதிகரிக்கச் செலவுகளைக் குறைக்கப் பல்வேறு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவிலும் பாதிப்பு: ஐரோப்பாவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) போன்ற நிறுவனங்களும் ஏஐ பயன்பாட்டை அதிகரித்து, புதிய பணியாளர்கள் சேர்ப்பதை நிறுத்தி வைத்துள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கிகள் தங்களின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க முயல்வதே இந்த வேலையிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

Advertisement