NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1 
    சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ செயல்படுத்தும் முதல் திட்டம்

    செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 26, 2023
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வரும் செப்.2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் முதல் சூரிய ஆராய்ச்சி திட்டத்தை செய்லபடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான விண்கலமான ஆதித்யா L1, வரும் செப்.2ஆம் தேதி ஏவப்படலாம் என்று அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின்(எஸ்ஏசி) இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் தெரிவித்துள்ளார்.

    இதற்கான செயற்கைக்கோள், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC-SHAR-க்கு எடுத்து செல்லப்பட்டு ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    டிஹல்

    இந்தியாவின் முதல் சூரிய ஆராய்ச்சி திட்டம் 

    "சூரியனைப் பற்றி ஆய்வு செய்ய, நாங்கள் ஆதித்யா-L1 திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது தயாராகி, ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளத. செப்டம்பர் 2ம் தேதி இது ஏவப்படும் வாய்ப்பு உள்ளது," என்று நிலேஷ் எம் தேசாய் கூறியுள்ளார்.

    ஆதித்யா L1 ஆய்வுக்கலனை, பூமி மற்றும் சூரியனுக்கிடையே உள்ள லெக்ராஞ்சு புள்ளி 1ன்(L1) அருகே ஹேலோ சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்தப் புள்ளியில் இருந்து ஒரு வருடத்தின் அனைத்து நாட்களிலும், அனைத்து நேரமும் எந்தத் தடையுமின்றி சூரியனையும், தட்ப வெப்ப நிலையில் அதன் தாக்கத்தையும் ஆய்வு செய்ய முடியும்.

    இந்த ஆதித்யா L1 திட்டம் தான், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ செயல்படுத்தும் முதல் திட்டமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரயான் 3
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இஸ்ரோ

    'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை  இந்தியா
    புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம்  சந்திரயான் 3
    ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் ஒத்திகையின் இரண்டாம் நிலையை தொடங்கியிருக்கும் இஸ்ரோ சந்திரயான்
    நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3 சந்திரயான் 3

    சந்திரயான் 3

    நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ இஸ்ரோ
    இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 இஸ்ரோ
    சந்திரயான்-3: சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ இஸ்ரோ
    "எத்தனை குளறுபடிகள் ஏற்பட்டாலும் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கும்"- இஸ்ரோ தலைவர் சோம்நாத் இஸ்ரோ

    இந்தியா

    இந்தியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு அசாம்
    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்? சந்திரயான் 3
    நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன்  பலாத்காரம்
    பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம் வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025