வீட்டு தோட்டக்கலை 101: கெமோமில் செடி வளர்க்க டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
கெமோமில் செடியை வீட்டிற்குள்ளேயே வளர்ப்பது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். குறிப்பாக, மனதை அமைதிப்படுத்தும் இந்த மூலிகையை நீங்கள் விரும்புறவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் தான். கெமோமில் ஒரு வலிமையான செடி. பலவிதமான சூழ்நிலைகளிலும் நன்றாக வளரும். அதனால், வீட்டிற்குள்ளேயே தோட்டம் போடுபவர்களுக்கு இது சரியான தேர்வு. சரியான சூழ்நிலைகளையும், கவனிப்பையும் கொடுத்தால், வீட்டிலேயே உங்களுக்கு எப்போதும் புதிய கெமோமில் பூக்கள் கிடைக்கும். கெமோமில் செடியை வீட்டுக்குள்ளேயே வெற்றிகரமாக வளர்க்க சில முக்கியமான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
டிப் 1
சரியான தொட்டியை தேர்வு செய்தல்
வீட்டிற்குள்ளேயே கெமோமில் வளர்க்க, சரியான தொட்டியை தேர்வு செய்வது ரொம்ப முக்கியம். தண்ணீர் தேங்காமல் இருக்க, நல்ல வடிகால் துளைகள் கொண்ட தொட்டியைப் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் வேர்கள் அழுகிடும். குறைந்தபட்சம் ஆறு இன்ச் ஆழம் கொண்ட தொட்டி, வேர்கள் வளர போதுமான இடத்தைக் கொடுக்கும். மண் கலவை இலகுவாகவும், தண்ணீர் நல்லா வடியக்கூடியதாகவும் இருக்க வேண்டும். வழக்கமான தொட்டி மண்ணுடன் மணல் அல்லது பெர்லைட் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
டிப் 2
போதுமான வெளிச்சம் வழங்குதல்
கெமோமில் செடி நன்றாக வளர நிறைய வெளிச்சம் தேவை. அதனால், தினமும் குறைந்தது ஆறு மணிநேர சூரிய ஒளி படும் இடத்தில், தெற்குபக்கம் இருக்கும் ஜன்னல் பக்கத்தில் வைக்க வேண்டும். இயற்கை வெளிச்சம் போதவில்லையெனில், ஃப்ளூரசென்ட் (fluorescent) அல்லது LED க்ரோ லைட்களை (grow lights) பயன்படுத்தலாம். லைட்களை செடிகளுக்கு மேல் சுமார் 12 இன்ச் உயரத்தில் வைத்து, இயற்கை சூரிய ஒளியைப் போல தினமும் சுமார் 14 மணிநேரம் எரிய விடுங்கள்
டிப் 3
சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பராமரித்தல்
கெமோமில் செடி 65 டிகிரி ஃபாரன்ஹீட் (Fahrenheit)ல இருந்து 70 டிகிரி ஃபாரன்ஹீட் (அதாவது 18 டிகிரி செல்சியஸ் (Celsius)ல இருந்து 21 டிகிரி செல்சியஸ்) வரையிலான வெப்பநிலையில் நன்றாக வளரும். காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலேயோ, ஹீட்டிங் வென்ட்களுக்கு பக்கத்திலயோ செடிகளை வைக்க வேண்டாம். இது வெப்பநிலையை மாற்றி செடியை பாதிக்கும். கெமோமில் மிதமான ஈரப்பதத்தை விரும்பும். உங்கள் வீட்டிற்குள் வறண்ட சூழல் இருப்பின், ஒரு ஹியூமிடிஃபையர் (humidifier) பயன்படுத்தலாம். இல்லையென்றால், செடிகளுக்கு அருகில் ஒரு தண்ணீர் ட்ரே (tray) வைத்து ஈரப்பதத்தை பராமரிக்கலாம்.
டிப் 4
சரியான அளவு தண்ணீர் மற்றும் உரம் இடுதல்
கெமோமில் செடிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றுங்கள், ஆனால் அதிகமாக ஊற்ற வேண்டாம். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் வேர்கள் அழுகிடும். ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்றும் முன், மண்ணின் மேல் ஒரு இன்ச் காய்ந்துள்ளதை பரிசோதித்த பின்னர் தண்ணீர் ஊற்றவேண்டும். செடிகள் வளரும் காலத்தில், ஒவ்வொரு நான்கு வாரத்திற்கு ஒருமுறை சமச்சீர் திரவ உரத்தை கொடுங்கள். இது அவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும், அதே சமயம் அதிகப்படியான உப்புச்சத்து செடியை பாதிக்காது.