வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளுக்கு மழை நீரைப் பயன்படுத்துவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளுக்கு நல்ல பராமரிப்பு ரொம்ப முக்கியம். மழை நீர் கிடைத்தால், அது இந்தச் செடிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு சிறந்த இயற்கை வளம். மழை நீர் மிகவும் மென்மையாக இருக்கும், ரசாயனக் கலப்புகள் இருக்காது. அதோடு, செடிகளுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுச்சத்துக்களும் இதில் உள்ளது. இது உங்கள் வீட்டுச் செடிகள் நன்றாக செழித்து வளர உதவும். மழை நீரைப் பயன்படுத்திச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, மண்ணின் தரத்தையும், செடிகளின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். உங்கள் வீட்டுச் செடிகளுக்கு மழை நீரை எப்படிப் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்ள, இங்கே ஐந்து முக்கியமான டிப்ஸ் உள்ளது. இந்த இயற்கை வளத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
டிப் 1
மழை நீரைச் சரியாகச் சேகரிப்பது எப்படி?
மழை நீரை திறமையாக சேகரிக்க, சுத்தமான பாத்திரத்தை வெளியே, மழை நீர் விழும் இடத்தில் வைக்க வேண்டும். குப்பைகள், இலைகள், பூச்சிகள் விழாமல் இருக்க, அந்தப் பாத்திரத்தை ஒரு வலை அல்லது மூடியால் மூடி வைக்க வேண்டும். இந்த எளிய முறை மூலமாக, எந்த செலவும் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் நீரைச் சேகரிக்கலாம். பாசி படியாமல் இருக்க, அந்தப் பாத்திரத்தை அடிக்கடி சுத்தம் செய்ய மறவாதீர்கள்.
டிப் 2
செடிகளுக்கு மழை நீர் ஊற்றுவது
உங்கள் வீட்டுச் செடிகளுக்கு மழை நீர் பயன்படுத்துவது மிகவும் சுலபம். ஒரு தண்ணீர் ஊற்றும் கேனில் மழை நீரை நிரப்பி, செடிகளுக்கு ஊற்ற வேண்டியதுதான். மழை நீரில் ரசாயனங்கள் இல்லாததால, உங்க செடிகள் ஆரோக்கியமாக இருக்க, இது ஒரு சிறப்பான வழி. சாதாரண குழாய் நீரில் இருக்கும் உப்புத்தன்மை போல, மழை நீரில் அதிக உப்பிருக்காது இதன் மூலமாக, செடிகளின் வேர்கள் ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வளரும்.
டிப் 3
pH அளவை கவனியுங்கள்
பொதுவாக, மழை நீருக்கு நடுநிலையான pH அளவு இருக்கும். இது பெரும்பாலான வீட்டுச் செடிகளுக்கு ஏற்றது. எனினும், அவ்வப்போது ஒரு சாதாரண டெஸ்ட் கிட் பயன்படுத்தி pH அளவைச் சரிபார்த்து கொள்வது முக்கியம். சில செடிகளுக்கு லேசான அமிலத்தன்மை கொண்ட அல்லது காரத்தன்மை கொண்ட நீர் தேவைப்படலாம். அதனால், நீரின் pH அளவைத் தெரிந்துகொள்வது, தேவைப்படின் வினிகர் அல்லது சமையல் சோடாவை கொஞ்சமா கலந்து சரிசெய்ய முடியும்.
டிப் 4
மழை நீரைச் சரியாகச் சேமிப்பது
சேகரித்த மழை நீரைச் சுத்தமாகவும், செடிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வைக்க, அதைச் சரியாக சேமிப்பது ரொம்ப அவசியம். நேரடி சூரிய ஒளி படாத, ஒளி புகாத பாத்திரங்களில் நீரைச் சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான் பாசி வளராமல் இருக்கும். தூசு அல்லது காற்றில் இருக்கும் மாசுகள் தண்ணீரில் கலந்துவிடாமல் இருக்க, பாத்திரங்களின் மூடியை நன்றாக மூடி வைக்கவேண்டும்.
டிப் 5
மழை நீர் வடிநீரை உரமாகப் பயன்படுத்துவது
மழை நீர் சேகரிப்பு அமைப்புகளில் இருந்து வரும் வடிநீரை, வீட்டுச் செடிகளுக்கு ஒரு இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம். மழை, கூரைகள் வழியாக வடிகால் குழாய்களில் பாய்ந்து சேமிப்பு தொட்டிகளுக்கு வரும்போது, அது கூரைகளில் இருந்து மற்ற பரப்புகளில் இருக்கும் சத்துக்களையும் தன்னோடு சேர்த்து கொண்டு வரும். இந்த சத்துக்களை செடிகளோட அடிப்பகுதியில அளவாக பயன்படுத்தினால், செடிகளுக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும். அதோடு, அதிக உரம் போடும் அபாயமும் இருக்காது.