NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி
    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி

    எழுதியவர் Nivetha P
    Feb 11, 2023
    04:47 pm
    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி
    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி

    பல்வேறு மாநில மொழிகள், அந்நிய நாட்டு மொழிகள் என 15 மொழிகளை எழுதவும், பேசவும் கற்றுக்கொண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருகிறார் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கிருபாஷிணி. பட்டபடிப்பினை முடித்துள்ள கிருபாஷிணி பள்ளி பயிலும் போதிருந்தே படிப்பின் மீது மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. தனது சிறு வயதிலேயே இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை கற்று தேர்ந்துள்ளார். இவருக்கு மொழியின் மீதுள்ள ஆர்வத்தை கண்டறிந்த அவரது பெற்றோர் அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஊக்குவித்துள்ளார்கள்.

    2/2

    30 வயதிற்குள் 20 மொழிகளை கற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முயற்சி

    இதனை தொடர்ந்து கிருபாஷிணி படிப்படியாக பல்வேறு மொழிகள் கற்க ஆர்வமுற்று முறைப்படி கற்று தேர்ந்துள்ளார். மொழிகளை கற்றுக்கொள்ள பல மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ள இவர், ஒரு மொழியை முழுமையாக கற்றுக்கொள்ள 3 மாத காலமே ஆகும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது 15 மொழிகளை இவர் பேசியும், எழுவதும் மட்டுமின்றி முறையாக உச்சரித்தும் வருகிறார். தொடர்ந்து, தன்னை போல் பல்வேறு மொழிகளை கற்க விரும்பும் குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுகிறார். தன்னுடைய 30 வயதிற்குள் 20 மொழிகளை கற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே இவரது குறிக்கோள் ஆகும். இவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோவை
    தமிழ்நாடு

    கோவை

    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் தமிழ்நாடு
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் தமிழ்நாடு
    தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு மாவட்ட செய்திகள்
    'மண் காப்போம்' இயக்கம் குறித்து விழிப்புணர்வு - பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண் ஈஷா யோகா

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் ஈரோடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமாரி
    வேலூரில் சிறப்பு தேவை குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச முடித்திருத்தம் மாவட்ட செய்திகள்
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023