NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி
    பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி

    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    07:58 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் லோகேஷ், இவர் பொறியியல் படித்துள்ளார். எனினும் விவசாயம் மீது அதீத விருப்பம் கொண்டவர்.

    மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற நெல் ரகங்களை பயிரிட அவர் நிலத்தை தற்போது தயார் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் பாரம்பரிய நெல் விதை விவசாயம் குறித்து பேசுகையில், தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறந்து விட்டோம்.

    ஆனால் நம் முன்னோர்கள் அவற்றை சாப்பிட்டு தான் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாஸ்த்துள்ளார்கள்.

    உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த ரக நெல் விதைகளை அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்ய வேண்டும். சரியான முறையில் இதனை செய்தால் நிச்சயம் லாபம் ஈட்ட முடியும் என்று தெரிவித்தார்.

    பெண்களுக்கானது பூங்கார்

    மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்

    இதனை தொடர்ந்து இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் தன்னை தொடர்பு கொண்டால் இலவசமாகவே விதை நெல் தர தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

    பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தன்னால் இயன்றதை அவர் செய்து வருவதாகவும் கூறினார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை அதிகரிப்பதோடு, நரம்புகளும் வலுப்பெறும்.

    குறிப்பாக வளரும் ஆண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை சம்பா மிகவும் ஏற்றதாகும்.

    இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கக்கூடியது என்று கூறினார்.

    இதனையடுத்து, பூங்கார் அரிசி கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் அளிக்கக்கூடியது என்றும் அவர் இந்த ரக அரிசிகளின் நன்மைகளை எடுத்துரைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம் மாவட்ட செய்திகள்
    முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றம்
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025