NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு 
    நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு

    நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 01, 2023
    06:45 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் பலவகை இருந்தாலும் சூடான பிரியாணி தான் பலரது விருப்பமான உணவாக இருந்து வருகிறது.

    அதுவும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்முறை வந்த பின்னர், வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து பிரியாணி சாப்பிடுவோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் நாளை(ஜூலை.,2)சர்வதேச பிரியாணி தினம் கொண்டாடப்படவுள்ளது.

    அதன்படி உணவு டெலிவரிசெய்யும் ஸ்விகி நிறுவனம் இந்திய மக்கள் தங்கள் தளத்தில் பிரியாணியினை ஆர்டர் செய்தது குறித்து கணக்கெடுப்பு ஒன்றினை நடத்தியுள்ளது.

    இதில் பிரியாணி தான் விருப்பமான உணவுப்பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 15ம்தேதி வரை தங்கள் தளத்தில் பிரியாணிக்கான ஆர்டர் 8.26%அதிகரித்துள்ளது என்றும்,கடந்த 2022ம்ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பிரியாணி ஆர்டர்கள் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரியாணி 

    ஒரே ஆர்டரில் ரூ.31,532க்கு பிரியாணியினை ஆர்டர் செய்த சென்னை வாசி 

    மேலும் இந்த கணக்கீட்டின்படி, பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை குறித்து பார்த்தால், ஹைதராபாத்தில் உள்ள ஸ்விகி நிறுவனம் 7.2 மில்லியன் ஆர்டர்கள் அதிகம் பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளது.

    அடுத்த இடத்தில் பெங்களூர் 5 மில்லியன் ஆர்டர்கள் செய்யப்பட்டு இடம்பெற்றுள்ளது.

    சென்னை 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை செய்து 3ம்இடத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது.

    குறிப்பாக 85வகை பிரியாணியுடன், 35மில்லியன் ஆர்டர்களை பெற்று ஹைதராபாத் பிரியாணி சாதனை படைத்துள்ளது.

    பிரியாணி வழங்கும் உணவகங்களில் பெங்களூர் 24,000உணவகங்களை கொண்டுள்ளது,அடுத்து மும்பை 22,000 உணவகங்களும், டெல்லி 20,000உணவகங்களும் கொண்டு அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

    இதனிடையே சென்னையிலுள்ள ஒருவர் ஸ்விகியில் தனது ஒரே ஆர்டரில் ரூ.31,532க்கு பிரியாணியினை ஆர்டர் செய்து பிரியாணிமீதான தனது தீராத காதலினை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    நானியின் 'HIT 3' Netflix இல் வெளியாகிறது, இந்த தேதியில்! நெட்ஃபிலிக்ஸ்
    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்

    இந்தியா

    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  கனடா
    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி
    பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் பாகிஸ்தான்
    இராணுவத்தை செயல்படவிடாமல் தடுக்கும் மணிப்பூர் பெண்கள்  மணிப்பூர்

    சென்னை

    அதிமுக பொதுக்குழு தொடர்பான ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்  அதிமுக
    இந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல்  இந்தியா
    கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா? திரௌபதி முர்மு
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு மெட்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025