NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!
    மாயமான சுபஸ்ரீ சடலமாக மீட்பு

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023
    05:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

    திருப்பூர் அவிநாசியை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

    இவரது மனைவி சுபஸ்ரீ(34), ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளாக சுபஸ்ரீ, ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி ஒரு வார யோகா பயிற்சிக்கு சென்ற இவர், 18ஆம் தேதிக்கு பின்னும் வீடு திரும்பவில்லை.

    இதனையடுத்து, இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதை போலீஸார் 6 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

    மர்மம்

    சுபஸ்ரீக்கு என்ன நடந்தது?

    சிசிடிவி கேமராவில், கையில் கொண்டு போன பைகள், மொபைல் எதுவுமே இல்லாமல் சுபஸ்ரீ ஒரு வெள்ளை உடையில் எங்கோ ஓடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    18ஆம் தேதி கணவர் பழனிகுமாருக்கு சில புதிய தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதை அவரால் எடுக்க முடியவில்லை. சுபஸ்ரீ தான் வெவ்வேறு ஆட்களிடம் இருந்து மொபைலை வாங்கி தன் கணவரிடம் பேச முயற்சித்திருக்கிறார் என்கிறது காவல்துறை.

    சுபஸ்ரீ ஒரு காரில் லிப்ட் கேட்டு செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் இறங்கி இருக்கிறார்.

    இதனையடுத்து, 2 வாரங்களுக்கு பின், அவரது உடல் செம்மேடு அருகே உள்ள காந்தி நகர் கிணற்றில் கண்டெக்கப்பட்டது.

    இதனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈஷா மையத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் சென்னை
    மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை! கொரோனா
    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! அரசியல் நிகழ்வு
    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம் வைரல் செய்தி

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025