NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள கும்பகோணம் மாவட்டம் 1000ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழ மன்னர்களின் தலைநகராக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    அதன்பின்னர் 1789ம்ஆண்டு வரை ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடியும் வரை தலைநகரமாக இருந்துள்ளது.

    மேலும் கும்பகோணத்தில் கடந்த 1806ம்ஆண்டு வரை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றமும்,

    தற்போது தஞ்சாவூர் மாவட்ட தலைமை நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள், சிலைத்திருட்டு தடுப்பு நீதிமன்றம் என ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெற்றிலை, ஐம்பொன்சிலைகள், பித்தளை குத்து விளக்குகள், பிரபலமான நகைக்கடைகள் என தினந்தோறும் லட்சக்கணக்கில் வருமானமும், ஏற்றுமதியும் செய்யப்படுவதால் கும்பகோணம் வர்த்தக கேந்திரமாக திகழ்கிறது.

    இதுபோல் பல சிறப்புகள் கொண்ட கும்பகோணத்தை கடந்த 25 ஆண்டுகளாக தனிமாவட்டமாக அறிவிக்க அனைத்து கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    மிகுந்த எதிர்பார்ப்பு

    தேர்தல் வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர்

    இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.

    இதனால் தற்போது இதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் பலமுறை இதுகுறித்து நேரடியாக சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் பல அமைதி வழி போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    எனவே சட்டப்பேரவையில் வரும் 10ம் தேதி நடக்கவுள்ள வருவாய் மானியக்கோரிக்கையின் போது கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்பார் என கும்பகோணம் பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் இந்தியா
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    மாவட்ட செய்திகள்

    கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள் தமிழ்நாடு
    தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு இந்தியா
    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு ராமநாதபுரம்
    தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு தமிழ்நாடு செய்தி

    மு.க ஸ்டாலின்

    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு தமிழ்நாடு
    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025