
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
மே-1
இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30-40கிமீ) கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மிக அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தென்காசி, கோவை
details
தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்யும்
மே-2
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30-40கிமீ) கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி,ஈரோடு, கோவை,திண்டுக்கல், தேனி, திருப்பூர்
மே-3
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்,கரூர், திருச்சி பெரம்பலூர்,நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர்
மே-4
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மே-5
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.