அடுத்த செய்திக் கட்டுரை

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
எழுதியவர்
Sindhuja SM
Apr 05, 2023
04:36 pm
செய்தி முன்னோட்டம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால், ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 7-ஏப்ரல் 9ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வடஉள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பதிவான இடங்கள்
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 5, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது